Sunday, April 19
Shadow

பார்க்கணும் போல இருக்கு – திரை விமர்சனம்

இயக்குனர் S.P,ராஜ்குமார் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் ஏன் விஜய் நடித்த சுறா படத்தின் இயக்குனரும் இவர் தான் இயக்குனர் S.P.ராஜ்குமார் படங்களில் காமெடிக்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும் அந்த வகையில் இந்த படமும் முழுக்க முழுக்க காமெடி கதை என்று தான் சொல்லணும் அதோடு கொஞ்சம் செண்டிமெண்ட் கலந்த படமாக கொடுத்துள்ளார் .

எப்.சி.எஸ். கிரியேஷன்ஸ் துவார்.ஜி.சந்திரசேகர் வழங்க , “நீ நான் நிலா ” பரதன் – அன்சிபா ஜோடி நடிக்க சூரி, கஞ்சா கருப்பு,லிவிங்ஸ்டன், ஜெயப்பிரகாஷ், விஜய் ஆனந்த், சிங்கப்பூர் துரைராஜ், பிளாக் பாண்டி, முத்துக்காளை, ஜானகி உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்க, எஸ், பி.ராஜ்குமாரின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் மற்றும் இயக்கத்தில் வந்திருக்கும் படம் தான் “பார்க்கணும் போல இருக்கு”.

கிராமத்து காதல் ஜோடி ஒன்று வீட்டில் எக்குத்தப்பாய் மாட்டிக் கொண்டதால் ஒரு மாதிரி இருவீட்டு பெரியோர் சம்மதத்துடன் அவர்களது திருமண நாள் குறிக்க நிட்சயதார்த்த ஏற்பாடுகள் நடக்கின்றன. தடபுடலாக ஆரம்பமாகும் அந்நாளில் அந்த காதல் ஜோடியில் பையனின் அண்ணனும், பெண்ணின் அக்காவும் எதிர்பாராது திடீர் காதலில் விழ இந்த விஷயம் இரு குடும்பங்களின் கண்ணிலும் காதிலும் விழ மூத்தோர் இருக்க இளையவர்களுக்கு திருமணமா? எனும் யோசனையில் இருந்த இரு குடும்பமும் அவர்களுக்கு முதலில் நிட்சயமும் திருமணமும் செய்கிறது. அந்த திருமணத்தில் சில நாட்களில் பெரிய முறிவு ஏற்பட அதுவே இவர்களது குடும்பத்திற்கு இடையேயும் காதலிலும் பெரிய பிரிவை கூட்டுகிறது. அதன் பின் தடை பல கடந்து நடை பல நடந்து காதலர்கள் மீண்டும் இணைந்தனரா? இல்லையா? என்பது தான் “பார்க்கணும் போல இருக்கு ” படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம்.

“நீ நான் நிலா” படத்தில் நாயகனாக நடித்த பரதன், இந்தப் படத்தில் கதையின் நாயகனாக கிராமத்து இளைஞனாக கலக்கி இருக்கிறார். தன் முதல் படத்தைக் காட்டிலும் இந்தப் படத்தில் மனிதர் மிகவும் கூடுதலாக திறமை காட்டியிருக்கிறார் பாராட்டுக்கள்.

கதாநாயகி அன்சிபா, அடி ஆத்தி எனும் அளவிற்கு கிராமத்து நாயகியாக கலக்கியிருக்கிறார்.

சூரி தன் வழக்கமான காமெடியில் இருந்து மாறுபட்டு ஜமாய்த் திருக்கிறார். கஞ்சா கருப்பும் தன் பங்குக்கு காமெடியில் பிய்த்து பெடலெடுத்திருக்கிறார். நாயகரின் தோழராக வரும் பிளாக் பாண்டியின் காமெடியும் மற்ற படங்களைக் காட்டிலும் ரசனை!

நாயகியின் அப்பா லிவிங்ஸ்டன், நாயகரின் அப்பா ஜெயப்பிரகாஷ், அண்ணன் விஜய் ஆனந்த், வட்டிக்காரர் சிங்கப்பூர் துரைராஜ், இரண் டொரு சீனில் வரும் முத்துக்காளை, நாயகியின் அவசர புத்தி அக்கா ஜானகி உள்ளிட்ட அத்தனை நட்சத்திரமும், அவர்கள் ஏற்றிருக்கும் பாத்திரமும் அசத்தலா அசத்தல் .

சுதாவின் படத்தொகுப்பில் பெரிய குறை ஒன்றுமில்லை. எஸ்.எஸ்.மூர்த்தியின் கலை இயக்கத்தில் செயற்கையாக காட்சிகள் எதுவும் தெரியாதது இப்படத்திற்கு கூடுதல் பலம் ஜி.ரமேஷின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் கிராமிய எழில் கொஞ்சும் ஒவியபதி பதிவு.

அருள் தேவின் இசையில் “முதல் முதல் எனையே மறந்தேன்”, “குப்பம்மா மகளே ” ,”ஒன் இரட்டை சடை கூப்பிடுதே முத்தம்மா”, “மஞ்சப் பூவே ஏய் மஞ்சப்பூவே”, “வெண்ணிலவே வெண்ணிலவே “, உள்ளிட்ட பாடல்கள் இசையும் பின்னணி இசையும் இப்படத்தின் கதையோடும் கதாபாத்திரங்களோடும் இசைந்து பிசைந்து ரசிகனை பெரிதாய் வசீகரிக்கிறது.

எஸ், பி.ராஜ்குமாரின் கதை, திரைக்கதை , வசனம் , பாடல்கள் மற்றும் இயக்கத்தில் “லவ் பண்ணும் போது மானே, தேனே அப்ட்டிங்கறீங்க அத்துக்கிட்டுப் போனா அடங்காபிடாரியா?”

“பிள்ளைங்க பெத்தவங்க கிட்ட காதல்னு வந்தவுடனே எல்லாத்தையும் மூடிமறைத்து வச்சிக்குதுங்க” என்பது உள்ளிட்ட யதார்த்த “பன்ச் களும், நாயகியிடம் ,குடிக்க பணம் கேட்கும் நாயகரின் நண்பர் சூரியிடம், அண்ணே அதிகமா குடிக்காதீங்க என்றபடி நூறு ரூபாய் கொடுக்க அதை வாங்கிக் கொண்டு சூரி இந்த நூறுக்கெல்லாம் அதிகமா குடிக்க முடியாது.” என நக்கல் அடிப்பது, ஒரு குடி பார்ட்டி, அண்ணே இந்த பஸ் மதுரை போகுமா என? ட்ரையினைப் பார்த்து கேட்டு, கஞ்சா கருப்பை கடுப்பேற்றும் காமெடி உள்ளிட்ட வெடிச்சிரிப்பு, சிறப்புகளுக்காக “பார்க்கணும் போல இருக்கு’ படத்தை ‘பார்க்கலாம்,பல முறைக்கு !”

Leave a Reply