எனக்கு என்ன வருமோ அதை நான் சிறப்பாக செய்ய விரும்புகிறேன் தேவை இல்லாத விஷயத்தில் நான் இருக்க மாட்டேன் – அஜித்
அஜித் தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகர் அதோடு முன்னணி நடிகரும் இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளாம் என்பது உலக அளவில் அதிகம் என்றால் அது இவருக்கு உண்டு என்று சொல்லலாம். அஜித் எப்போதும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று தான் இருப்பார் நடிப்பை தவிர வேறு எதிலும் மூக்கை நுழைக்கமாட்டார்.
சினிமா நடிப்பு என்பது தனது தொழில், அதனால் ரசிகர்களும் அவர் அவர் வேலையை பார்க்க வேண்டும், அதை விட்டுவிட்டு எனக்கு கட்-அவுட் வைப்பது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு தங்களது வாழ்க்கையை வீணடிக்க கூடாது, என்பதற்காக ரசிகர் மன்றத்தை கலைத்த அஜித், ரசிகர்களிடம் மனம் திறந்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விவேகம் படத்திற்கு பிறகு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள அஜித், தற்போது ஓய்வில் இருக்கிறார். இதற்கிடையே, அரசியல் குறித்து ரசிகர்களிடம் அஜித் பேசியதாக ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
விஜய், விஷால், கமல், ரஜின...
