
துப்பறிவாளராக ரீ-எண்ட்ரி கொடுக்கும் சேரன்
பாரதி கண்ணம்மா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சேரன். போர்க்களம் படத்தின் மூலம் நாயகனாகவும் நடித்தார். இவர் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படம் இவருக்கு முன்னணி இயக்குநர், நடிகர் என்ற அந்தஸ்தை பெற்று தந்தது.
பின்னர் ‘சென்னையில் ஒரு நாள்’, ‘மூன்று பேர் மூன்று காதல்’ படத்தில் உள்ளிட்ட படங்களில் இரண்டு, மூன்று கதாநாயகன்களில் ஒருவராக நடித்திருந்தார். அதன்பிறகு ‘ஜே.கே. என்னும் நண்பனின் வாழ்க்கை’ என்ற படத்தை இயக்கினார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
ஜெயம் ரவி, ஸ்ரேயா நடிப்பில் வெளியான ‘மழை’ படத்தை இயக்கிய ராஜ் குமார் அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் சேரன் நாயகனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது. இதுகுறித்து சேரன் கூறும்போது, ‘சிறந்த கதைக்காக தேடிக் கொண்டிருக்கும் ந...