சர்வதேச கவனத்தை ஈர்த்த ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ – அக்டோபர் 1 முதல் திரையரங்குகளில்!
சர்வதேச கவனத்தை ஈர்த்த ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ – அக்டோபர் 1 முதல் திரையரங்குகளில்!
சென்னை:
சர்வதேச திரைப்பட விழாக்களில் பல்வேறு பிரிவுகளில் பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்ற இயக்குநர் ராமின் புதிய திரைப்படமான 'ஏழு கடல் ஏழு மலை', வரும் அக்டோபர் 1 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்தப் படம், மனித உணர்வுகளை மையமாகக் கொண்டு இயக்குநர் ராம் உருவாக்கியிருக்கும் மற்றுமொரு தனித்துவமான படைப்பாக உருவாகியுள்ளது. வழக்கமான திரைப்பட மொழியைத் தாண்டி, மனித உறவுகள், வாழ்க்கைப் பயணம் மற்றும் உணர்வுகளின் ஆழத்தை திரையில் பதிவு செய்யும் முயற்சியாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.
நடிகர் நிவின் பாலி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் கதாநாயகனாக மீண்டும் களமிறங்கியுள்ள நிலையில், அவருடன் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த...
