‘போட்டோகிராபர்’ – திரைவிமர்சனம் (Rank 2.5/5)
‘போட்டோகிராபர்’ – காட்டுக்குள் தொலைந்தது யார்? மனிதனா… மனமா?
மர்மம், திகில், உளவியல் என ஒரு தனிமனிதனின் உயிர்ப்போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் ‘போட்டோகிராபர்’, வழக்கமான காட்டுக்குள் சிக்கிக்கொள்ளும் கதைகளிலிருந்து விலகி, ஒரு மனிதனின் மனதுக்குள் நடக்கும் பயணத்தையும் பதிவு செய்ய முயற்சிக்கிறது.
புகைப்படக் கலைஞரான வீரா, இதுவரை மனிதர்களின் பார்வைக்கு சிக்காத அரிய மரம் ஒன்றை புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் வனப்பகுதிக்குள் பயணிக்கிறார். எதிர்பாராத விதமாக வழிதவறி, வெளியுலகத் தொடர்பே இல்லாத ஆபத்தான காட்டுக்குள் சிக்கிக் கொள்கிறார். அங்கிருந்து மீள்வதற்கான போராட்டம் ஒருபுறம் இருக்க, காட்டுக்குள் அவர் சந்திக்கும் விசித்திரமான சம்பவங்கள் அவருடைய மனநிலையையே கேள்விக்குள்ளாக்குகின்றன.
‘அந்த மரத்தை அவர் பார்த்தாரா?’ என்பதைக் காட்டிலும், ‘அந்தக் காட...
