‘வதந்தி சீசன் 2’ மர்ம உலகிற்கு இசையால் உயிரூட்டும் ‘தெய்வா’… பிரைம் வீடியோ வெளியிட்ட துள்ளல் பாடல் ரசிகர்களை கவர்கிறது!
'வதந்தி சீசன் 2' மர்ம உலகிற்கு இசையால் உயிரூட்டும் 'தெய்வா'... பிரைம் வீடியோ வெளியிட்ட துள்ளல் பாடல் ரசிகர்களை கவர்கிறது!
சென்னை:
பரபரப்பும் மர்மமும் நிறைந்த கதைக்களத்தால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த 'வதந்தி' வெப் தொடரின் இரண்டாவது சீசனுக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தும் வகையில் பிரைம் வீடியோ மற்றும் டி-சீரிஸ் இணைந்து 'வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி' தொடரிலிருந்து 'தெய்வா' என்ற புதிய பாடலை வெளியிட்டுள்ளன.
இசையமைப்பாளர் சைமன் K. கிங் இசையமைத்து, இசைக்கோர்த்து, தயாரித்துள்ள இந்தப் பாடலை சைமன் மற்றும் யஷ்வந்த் இணைந்து உற்சாகமாகப் பாடியுள்ளனர். மணி ரோமியோ எழுதியுள்ள வரிகள், கிராமிய இசை நயத்துடன் கலந்த துள்ளலான தாளங்கள் மற்றும் கொண்டாட்ட மனநிலையை உருவாக்கும் இசை அமைப்பு ஆகியவை பாடலை முதல் முறை கேட்கும் ரசிகர்களையே கவரும்...
