சிங்கப்பூரில் “மீலாதுன் நபி”க்கு மாபெரும் வரவேற்பு – சமூக அங்கீகாரத்துடன் சர்வதேச பயணத்தை தொடரும் ஆவணப்படம்!
சிங்கப்பூரில் “மீலாதுன் நபி”க்கு மாபெரும் வரவேற்பு – சமூக அங்கீகாரத்துடன் சர்வதேச பயணத்தை தொடரும் ஆவணப்படம்!
சிங்கப்பூரில் நடைபெற்ற “மீலாதுன் நபி” திரைப்படத் திரையிடல் விழா, சாதாரண சினிமா நிகழ்வைத் தாண்டி ஒரு சமூக – கலாச்சார கொண்டாட்டமாக மாறியது. தாரகை முத்தமிழ் கழகத்தின் ஏற்பாட்டில் மே 10ஆம் தேதி ஊட்லண்ட்ஸ் நூலகத் திரையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திரைப்படத்திற்கும் அதன் படைப்புக் குழுவினருக்கும் பாராட்டுகள் குவிந்தன.
சிங்கப்பூர் மலாய் வர்த்தக மற்றும் தொழில் சபையின் தலைவர் முனைவர் அப்துல் மாலிக் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, சமூக சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ராயல் கிங்ஸ் குழுமத்தின் நிறுவனத் தலைவர் திரு. சிராஜுதீனுக்கு “சமூகக் கலைச் செம்மல்” விருதை வழங்கி கௌரவித்தார்.
அதேவேளை, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கும் மக்களிடையே பெரும் தாக்கத்தை உருவாக்கியதற்கும் இயக...
