இளைஞர்களை விழுங்கும் போதை கலாச்சாரம் – விழிப்புணர்வை எழுப்பும் ‘முதற்கனல்’ மே மாதம் திரைக்கு!
இளைஞர்களை விழுங்கும் போதை கலாச்சாரம் – விழிப்புணர்வை எழுப்பும் ‘முதற்கனல்’ மே மாதம் திரைக்கு!
இன்றைய சமூகத்தில் வேகமாக பரவி வரும் போதைப்பொருள் பயன்பாட்டை மையமாகக் கொண்டு, இளைஞர்கள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கையில் ஏற்படும் தாக்கங்களை வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ள புதிய தமிழ் திரைப்படம் ‘முதற்கனல்’ மே மாதம் திரைக்கு வர உள்ளது.
ஸ்ரீகெங்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.போத்திராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை, சமூக பிரச்சினைகளை வணிக ரீதியில் சொல்லும் தனித்துவம் கொண்ட இயக்குநர் ஆர்.வெங்கட்டரமணன் இயக்கியுள்ளார். முன்பு ‘அப்பா வேணாம்ப்பா’, ‘அதையும் தாண்டி புனிதமானது’ போன்ற படங்களில் மதுவின் பாதிப்பை எடுத்துக் காட்டிய அவர், இம்முறை போதைப்பொருள் கலாச்சாரத்தின் ஆபத்தை தீவிரமாக சித்தரிக்கிறார்.
புதுமுக நடிகர்கள் அஸ்வின், விக்னேஷ், ராஜேஷ், யோகேஷ், லட்சுமணன், ஆதி உள்ளிட்ட ...
