“நீட் தேர்வில் சமமான வாய்ப்பும், வெளிப்படையான நடைமுறையும் உறுதி செய்யப்பட வேண்டும்; மாணவர் நலனே முதன்மை” – தீப்ஷிகா வலியுறுத்தல்
"நீட் தேர்வில் சமமான வாய்ப்பும், வெளிப்படையான நடைமுறையும் உறுதி செய்யப்பட வேண்டும்; மாணவர் நலனே முதன்மை" – தீப்ஷிகா வலியுறுத்தல்
சென்னை:
நீட் தேர்வைச் சுற்றி நாடு முழுவதும் எழுந்துள்ள விவாதங்கள் மற்றும் மாணவர்களின் கவலைகள் குறித்து நடிகையும் முன்னாள் நீட் தேர்வு மாணவியுமான தீப்ஷிகா தனது கருத்தை வெளியிட்டுள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியத் தேர்வாக நீட் தொடருமானால், அதற்கான தயாரிப்பு, பயிற்சி மற்றும் தேர்வு நடைமுறைகள் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
"மருத்துவத் துறையில் நாளை உயிர்களைக் காக்கப் போகும் திறமையான மருத்துவர்களைத் தேர்ந்தெடுக்கும் முக்கியப் பொறுப்பை நீட் தேர்வு வகிக்கிறது. எனவே, இந்தத் தேர்வில் திறமை மட்டுமே வெற்றியை நிர்ணயிக்கும் சூழல் உருவாக வேண்டும். அதற்கு மாணவர்கள் அனைவருக்கு...
