‘மஹாவீர் கர்ணா’ – வாக்கைக் காப்பதற்காக வாழ்ந்த வீரனின் காவியம்; டிசம்பர் 4ல் பான் இந்தியா வெளியீடு!
‘மஹாவீர் கர்ணா’ – வாக்கைக் காப்பதற்காக வாழ்ந்த வீரனின் காவியம்; டிசம்பர் 4ல் பான் இந்தியா வெளியீடு!
சென்னை: மகாபாரதத்தில் எத்தனை வீரர்கள் இருந்தாலும், கர்ணனுக்கென்று தனி இடம் உண்டு. பிறப்பால் கிடைத்த அடையாளத்தைவிட, வாழ்க்கையில் தான் தேர்ந்தெடுத்த நட்புக்கும் கொடுத்த வாக்குக்கும் முக்கியத்துவம் கொடுத்தவன் கர்ணன். அந்த கதாபாத்திரத்தை மையமாக வைத்து, பிரம்மாண்டமான சினிமா அனுபவமாக உருவாகி வருகிறது ‘மஹாவீர் கர்ணா’.
பென் மூவீஸ், ஸ்ரீ நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர்வி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ஜெயந்திலால் கடா வழங்குகிறார். ‘ராட்சசன்’, ‘கில்லாடி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரமேஷ் வர்மா இப்படத்தை இயக்குகிறார்.
கர்ணனை மையமாகக் கொண்ட பல படைப்புகள் இதுவரை வெளியாகியிருந்தாலும், ‘மஹாவீர் கர்ணா’வை வெறும் புராணக் கதையாக மட்டும் சொல்லாமல், அடையாளம், அவமானம், நட்பு, விசுவாசம், கௌரவம், வி...


