சத்தியத்தின் பாதை எளிதல்ல; அதை உணர்த்த வரும் ‘ப்ராமிஸ்’!
சத்தியத்தின் பாதை எளிதல்ல; அதை உணர்த்த வரும் ‘ப்ராமிஸ்’!
சென்னை, ஜூன் 8:
மனித வாழ்க்கையில் உண்மையையும் சத்தியத்தையும் கடைபிடிப்பது எவ்வளவு கடினமானது என்பதை பலர் அனுபவித்திருப்பார்கள். அந்தச் சத்தியம் ஒரு மனிதனின் வாழ்க்கையை எவ்வாறு சோதனைக்கு உட்படுத்துகிறது என்பதை உணர்வுபூர்வமாகச் சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘ப்ராமிஸ்’.
மகாத்மா காந்தியின் ‘சத்திய சோதனை’ சுயசரிதை முதல், அரிச்சந்திரனின் வரலாறு வரை சத்தியத்தின் மகத்துவம் பல வடிவங்களில் பேசப்பட்டு வந்துள்ளது. அந்தப் பாரம்பரிய சிந்தனையை நவீன வாழ்க்கைச் சூழலோடு இணைத்து திரையில் பதிவு செய்யும் முயற்சியாக ‘ப்ராமிஸ்’ திரைப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தை இயக்கியுள்ள அருண்குமார் சேகரன், கதாநாயகனாகவும் நடித்துள்ளார். நாயகியாக நதியா சோமு நடித்திருக்கிறார். மேலும் சுஜன், அம்ரிஷ், பிரதாப், கோகுல், சுந்தரவேல், ராஜ்குமார், கலைவாணி உள்ளி...
