
நான் கட்சி தொடங்குவது உறுதி. ஆனால், இன்னும் நேரம் வரவில்லை – ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் தீவிரமாக அரசியல் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று இரவு மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் அவர் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்கா செல்லும் முன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ரஜினிகாந்த். அதில், ‘சீருடையில் இருக்கும் போலீஸ் காரர்களை தாக்கியது தவறு. காவலர்களும் சட்டம் கையில் இருக்கு என்று வரம்பு மீறக்கூடாது என்றார். ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்தது குறித்து, அவர் என்னுடைய 25 வருட நண்பர். அடிக்கடி நாங்கள் சந்திப்பது வழக்கம்’ என்றார்.
நான் கட்சி தொடங்குவது உறுதி. ஆனால், இன்னும் நாள் உறுதியாகவில்லை. பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். பத்திரிகையாளர்களை பற்றி இழிவாக பதிவு செய்த எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற...