‘ஜெய்பீம்’ கூட்டணி மீண்டும் களமிறங்குகிறது… ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் சூர்யா – த.செ. ஞானவேல் இணையும் ‘S-48’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
'ஜெய்பீம்' கூட்டணி மீண்டும் களமிறங்குகிறது... ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் சூர்யா - த.செ. ஞானவேல் இணையும் 'S-48' அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இந்திய சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள புதிய கூட்டணியாக, நடிகர் சூர்யா, இயக்குநர் த.செ. ஞானவேல் மற்றும் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ் இணையும் 'S-48' திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் மனதில் தனித்துவமான நடிகராக மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இடம்பிடித்துள்ள சூர்யா, சமூக அக்கறை மிக்க கதைகளையும், வணிக அம்சங்களையும் சமநிலைப்படுத்தி வெற்றிப்படங்களை வழங்கிய த.செ. ஞானவேலுடன் மீண்டும் கைகோர்ப்பது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'ஜெய்பீம்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைவது இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தப் பிரம்மாண்ட முயற்சிய...









