சென்னையில் தொடங்குகிறது ‘தமிழ் ஐடல்’ வேட்டை: ஆகஸ்ட் 23 முதல் களத்தில் இறங்கும் இசைத் திறமைகள்!
சென்னையில் தொடங்குகிறது ‘தமிழ் ஐடல்’ வேட்டை: ஆகஸ்ட் 23 முதல் களத்தில் இறங்கும் இசைத் திறமைகள்!
சென்னைவாசிகளே… உங்கள் வீட்டில், நண்பர்கள் வட்டத்தில் அல்லது உங்களைச் சுற்றி பாடும் திறமை கொண்ட ஒருவர் இருந்தால், அவருக்கான அடுத்த பெரிய வாய்ப்பு இதோ வந்துவிட்டது!
தமிழகத்தின் அடுத்த இசை நட்சத்திரத்தைத் தேடும் ‘தமிழ் ஐடல்’ நிகழ்ச்சியின் முதல் நேரடி ஆடிஷன் வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இசைத்துறையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள ஏ.ஆர். ரஹ்மான் சூப்பர் ஜட்ஜாக தலைமை வகிக்கும் இந்தப் போட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மறைந்திருக்கும் இசைத் திறமைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வர இருக்கிறது.
14 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் இந்த ஆடிஷனில் பங்கேற்கலாம். சென்னை மேல் அயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா Annexure வளாகத்தில் முதல் கட்டத் தேர்வு நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்ச...
