ரசிகர்களால் ரசிகர்களுக்காக விஜய் எடுத்த அதிரடி முடிவு
விஜய் ரசிகர் மன்றப் பொறுப்பாளர் ஆனந்தின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, கடந்த 14-ம் தேதி (வெள்ளிக்கிழமை) புதுச்சேரி - திண்டிவனம் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்க விஜய் வருவதை அறிந்து, அங்கு ஏராளமான ரசிகர்கள், அமைப்பு நிர்வாகிகள் திரண்டிருந்தனர்.
திருமண அரங்குக்குள் விஜய், தன் மனைவி சங்கீதாவுடன் வந்ததும், அவரைக் காண ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு வந்ததால், அங்கு பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், மண்டபத்தில் இருந்த ஏராளமான நாற்காலிகள் சேதமடைந்தன.
இந்த சம்பவத்தால் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவால் மணமக்களின் அருகில் சென்று வாழ்த்துகூடத் தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர், பெரும் முயற்சி செய்து மேடைக்குச் சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், மேடையிலும் ரசிகர்கள் ஏறி அவருடன் புகைப்படம் எடுக்க ...






