
எல்லா இயக்குனரும் நல்ல கதை காலத்தோடு தான் வருகிறார்கள் ஆனலவர்களுக்கு எதிர்பார்க்கும் நாயகன் நாயகி பட்ஜெட் கிடைப்பது இல்லை இதனால் பல படங்கள் என்ன ஆனது என்று தெரியாமல் பொய் விடும் சிறந்த மண் வாசனை மற்றும் குடும்ப பின்னணி கதைகள் வருவது தற்போது அரிது அப்படி நல்ல கதை நல்ல இசை இப்படி எல்லா மாசமும் கொண்ட படம் விருதாச்சலம்.
இந்த படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் தான் நடித்துள்ளனர். புதுமுகமாக அறிமுகமாகும் விருதகிரி நாயகியாக ஸ்வேதா மற்றும் பலர் நடிப்பில் ஸ்ரீராம் இசையில் அற்புதமான பாடல்களில் சிவநேசன் ஒளிப்பதிவில் அறிமுக இயக்குனர் ரத்தன் கணபதி இயக்கி இருக்கும் படம் விருதாச்சலம்
நாயகன் விருதகிரியின் முறைப் பெண்ணான நாயகி ஸ்வேதாவைத்தான் சிறுவயதில் இருந்தே திருமணம் செய்து வைக்கப்போவதாக இருவரது வீட்டிலும் சொல்லி வளர்க்கிறார்கள். இதனால், இவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் பாசத்துடன் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில், பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது, ஊர் தலைவரின் பையன் ஒருநாள் நாயகியை கீழே தள்ளிவிட, அவளை தள்ளிவிட்ட கையை நாயகன் வெட்டி விடுகிறான். தன் கையை வெட்டிய நாயகனை வெட்டச்செல்லும்போது தவறுதலாக நாயகியின் அண்ணனை வெட்டி விடுகிறார். இதனால் சம்பவ இடத்திலேயே நாயகியின் அண்ணன் இறந்து போகிறார்.
இதையடுத்து, போலீஸ் நாயகனையும், ஊர் பெரியவரின் மகனையும் சீர்திருத்த பள்ளியில் அடைக்கிறது. பல வருடங்கள் கழித்து வளர்ந்து பெரியவர்களாகி இருவரும் வெளியே வருகிறார்கள். அதற்குள், நாயகனின் அத்தை கணவனையும், மகனையும் இழந்த சோகத்தில் அந்த ஊரை விட்டு வெளியேறி விடுகிறார்கள்.
சீர்திருத்த பள்ளியில் இருந்து வெளியில் வந்ததால் ஊரில் யாரும் நாயகனுக்கு வேலை கொடுக்க மறுக்கிறார்கள். இந்நிலையில், ஒரு மரக்கடையில் சேர்ந்து வேலைபார்த்துக் கொண்டிருக்கும் நாயகனுக்கு அந்த ஊரில் டீச்சராக வரும் ஸ்வேதா தனது முறைப்பெண் என்பதை தெரிந்துகொண்டு அவளை பின்தொடருகிறார்.
ஆனால், ஸ்வேதாவோ, நாயகனை வெறுத்து ஒதுக்குகிறாள். தன்னுடைய நிலைமையை அவளிடம் எடுத்துக்கூற முயற்சி செய்தும் தோற்றுப்போகிறார். அதேநேரத்தில், தான் ஜெயிலுக்கு போக காரணமான நாயகனை எப்படியாவது தீர்த்துக்கட்ட வேண்டும் என்று ஊர் பெரியவரின் மகனான சம்பத் முடிவெடுக்கிறார்.
இறுதியில், நாயகன் நாயகியிடம் தன்னை பற்றி புரிய வைத்து ஒன்று சேர்ந்தாரா? சம்பத்திடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொண்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் விருதகிரி, வழக்கமாக வரும் நடிகர்களை போல வந்து நடித்துவிட்டு சென்றிருக்கிறார். குறிப்பிட்டு சொல்லும்படியாக எதுவும் இல்லை என்றாலும், படத்தில் கோபக்காரராக நடித்து மிரட்டியிருக்கிறார். நாயகி ஸ்வேதாவின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. மற்ற நடிகர்கள் அனைவரும், தங்களது கதாபாத்திரத்திற்கு தேவையானதை சிறப்பாக கொடுத்திருக்கின்றனர். மற்றொரு நடிகரான சம்பத்தின் நடிப்பு பாராட்டும்படியாக
ரத்தன் கணபதி திரைக்கதையை அமைத்திருப்பதில் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம். மேலும் படத்தின் நீளத்தையும் கொஞ்சம் குறைத்திருந்தால் படம் ரசிக்கும்படியாக அமைந்திருக்கும். மற்றபடி படம் கரடுமுரடாக உள்ளது.
ஸ்ரீராம் இசையில் படத்தின் பாடல்கள் பார்க்கும்படியாக இருக்கிறதே, தவிர ரசிக்கும்படியாக இல்லை. படத்தின் பின்னணி இசை படத்திற்கு ஓரளவுக்கு பலம் சேர்த்திருக்கிறது. சிவனேசன் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது.
மொத்தத்தில் `விருத்தாச்சலம்’ நம்ம விஜயகாந்த்
