Wednesday, June 24
Shadow

ஜப்பான் போலீசாரிடம் சிக்கிக் கொண்ட ராஜா ராணி சீரியல் நாயகி

ரசிகர்கள் மத்தியில் வெள்ளித்திரை பிரபலங்கள் எப்படி பிரபலமாகி இருக்கிறார்களோ, அந்த அளவுக்கு சின்னத்திரை பிரபலங்களும் பிரபலமாகி வருகின்றனர். வெள்ளித்திரை நடிகைகளுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் சின்னத்திரை நடிகைகளுக்கும் இருக்கிறது. அந்த வகையில் சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானவர் தான் ஆல்யா மனாசா.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீரியல் மூலம் இவர் பிரபலமாகினார். சொல்லப்போனால் இளைஞர்கள் பலரும் இவருக்காகத் தான் இந்த சீரிலையே பார்க்கின்றனர் என்றும் கூறலாம்.

அதுமட்டுமின்றி இவர் பங்குபெறும் நடன நிகழ்ச்சி, அவரது வீடியோ என அனைத்துமே சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

அந்த வகையில் பிரபலமான ஆல்யா மனாசா அவரது பழைய அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசும் போது ஒருமுறை ஜப்பான் போலீசால் கையும் கலவுமாக பிடிக்கப்பட்டு பின்னர் ஒரு வழியாக தப்பித்ததாக கூறியிருக்கிறார். ஜப்பானில் ஒருமுறை அவரது தோழியுடன் சைக்கிளில் சென்ற போது போலீசாரிடம் மாட்டிக் கொண்டாராம். அங்கு பெரிய ரகளையே நடந்ததாம்.

பின்னர் அந்த போலீசாரை சமாளித்து அங்கிருந்து வந்ததாக கூறியிருக்கிறார்.

Leave a Reply