
இந்தி நடிகை கஜோல் பல ஆண்டுகளாக பாலிவுட் சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் ஒரு நடிகை. இந்தி நடிகையயக இருந்தாலும் மற்ற மொழி ரசிகர்களையும் மிகவும் கவர்ந்தார். தமிழில் “மின்சாரக்கனவு ” படத்தில் நடித்த கஜோல் பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு தனுஷ் நடித்த “விஐபி 2” படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்து அசத்தினார்.
இன்றளயும் இந்தி படங்களில் நடித்து வரும் கஜோல் தற்போது ஷாரு கான் நடித்து வரும் “ஜீரோ” படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 1999 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் அஜய் தேவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது.
2003 ஆண்டு இவருக்கு முதல் பெண் குழந்தை பிறந்து, அதன் பின்னர் 7 ஆண்டுகள் கழித்து 2010 ஆம் ஆண்டு ஒரு ஆன் குழந்தைக்கும் தாயானார் நடிகை கஜோல். அவருடைய மூத்த மகளின் பெயர் “நைஸா” மற்றும் மகனின் பெயர் “நக்”
தற்போது 15 வயதாகும் நைஸா சிங்கப்பூரில் படித்து வருகிறார். சமீபத்தில் நடிகை கஜோல் சிங்கப்பூரில் உள்ள ஒரு அருங்காட்சியத்தில் ஒன்றில் மெழுகு சிலை திறப்பதற்க்காக சென்றுள்ளார். இந்நிலையில் தனது மகளுடன் மகழ்ச்சியாக புகைப்படம் ஒன்றை எடுத்து “முதல் முறையாக சிவப்பு கம்பளத்தில் என்னுடைய மகள் , என்னுடன் இருக்கிறார்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகை கஜோல்.
1992 ஆம் வருடம் நடிகர் ஷாருக் கானுக்கு கதாநாயகியாக நடித்த அவரது அறிமுக திரைப்படம் ‘பெகுடி’ ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி வெளியானது. இந்த ஆண்டோடு திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகளை கடந்தது.
இவர் நடித்த தமிழ் படங்கள்
வேலையில்லா பட்டதாரி 2 , மின்சார கனவு