
சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!
“சினிமா கன்னடம், தமிழ், தெலுங்கு என பிரிந்தது அல்ல; அது இந்திய சினிமா” – யாஷ்
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள ‘டாக்ஸிக்: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படத்தின் பிரம்மாண்ட முன்வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம், ஆக்ஷன், கேங்ஸ்டர் உலகம், குடும்ப உறவுகள், துரோகம், அதிகாரப் போட்டி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. படம் ஆகஸ்ட் 26-ந் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் வெளியீட்டையொட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விளம்பர நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழ் ரசிகர்களை நேரடியாக சந்திக்கும் வகையில் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று பிரம்மாண்டமான முன்வெளியீட்டு விழா நடைபெற்றது.
யாஷ், கீது மோகன்தாஸ், கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி, சுதேவ் நாயர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி, ரசிகர்களின் உற்சாகத்தால் களைகட்டியது.

“தமிழ் ரசிகர்களின் அன்பு மறக்க முடியாதது” – யாஷ்
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் யாஷ், தமிழ் ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.
“தமிழ் மக்களே, நீங்கள் எப்போதுமே எனக்கு அளவில்லாத அன்பை வழங்கி வருகிறீர்கள். ‘KGF’ படத்தின் போது நீங்கள் எனக்கு கொடுத்த வரவேற்பும் அன்பும் அளப்பரியது. அதற்காக தமிழ் மக்களுக்கு தலைவணங்குகிறேன்.
‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்தபோது அது தயாரிப்பாளருக்கு மிகவும் வேதனையான தருணமாக இருந்தது. ஆனால் அந்த நேரத்திலும் நீங்கள் காட்டிய அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதது. விஜய் சாருக்கு நீங்கள் காட்டும் அன்பும் அதேபோன்றதுதான்.
‘டாக்ஸிக்’ ஆர்வம் மற்றும் உணர்வுகளைப் பற்றிய திரைப்படம். இது முற்றிலும் வித்தியாசமான ஓர் உலகம். ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இந்தப் படம் இருக்கும்.
சினிமா என்பது கன்னடம், தமிழ், தெலுங்கு என்று தனித்தனியாக பிரிந்தது அல்ல. அது இந்திய சினிமா. அந்த வகையில் ‘டாக்ஸிக்’ திரைப்படம் அனைவருக்கும் புதிய அனுபவத்தை கொடுக்கும்” என்றார்.

“யாஷின் 2.0 வெர்ஷனாக ‘டாக்ஸிக்’ இருக்கும்” – கீது மோகன்தாஸ்
இயக்குநர் கீது மோகன்தாஸ் பேசும்போது, தனது நீண்டகால சினிமா பயணம் குறித்தும், யாஷ் தன் மீது வைத்த நம்பிக்கை குறித்தும் குறிப்பிட்டார்.
“எனக்கு 4 வயதாக இருந்தபோதே எனது சினிமா பயணம் தொடங்கிவிட்டது. முதல் படத்தை முடித்தபோது, என்னால் இரண்டாவது படத்தை இயக்க முடியும் என்று யாரும் நம்பவில்லை. அந்த நிலை தொடர்ந்து கொண்டே இருந்தது.
ஆனால் இப்போது இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரமான யாஷ் சார் என் மீது நம்பிக்கை வைத்து, ‘நீங்கள் இதை செய்யுங்கள்’ என்று கூறினார். ‘படையப்பா’ உள்ளிட்ட பல மாஸ் மற்றும் கமர்ஷியல் திரைப்படங்களை எனக்கு ரெஃபரன்ஸாக யாஷ் சார் காட்டினார்.
‘டாக்ஸிக்’ திரைப்படம் யாஷின் 2.0 வெர்ஷனாக இருக்கப் போகிறது. அனைவருக்கும் நன்றி” என்றார்.

“ஒரே ஒரு ராக்கிங் ஸ்டார் – அது யாஷ்” – ஹுமா குரேஷி
நடிகை ஹுமா குரேஷி கூறுகையில், ‘டாக்ஸிக்’ திரைப்படம் தனது திரைப்பயணத்தில் முக்கியமான படைப்பு என்று தெரிவித்தார்.
“நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னைக்கு வந்திருக்கிறேன். இங்கு வருவது எப்போதுமே எனக்கு ஸ்பெஷலானது. நான் எங்கு சென்றாலும் பலரும் என்னை ‘கண்ணம்மா’ என்று அழைக்கிறார்கள்.
‘டாக்ஸிக்’ என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒரு அங்கம். கடந்த 3 ஆண்டுகளாக இந்தப் படத்திற்காக எனது நேரத்தை செலவிட்டிருக்கிறேன்.
கீது மோகன்தாஸ் என்னை அணுகியபோது கதாபாத்திரம் குறித்து அதிகம் சொல்லவில்லை. ‘என்னை நம்பு’ என்று மட்டும் கூறினார். அவர் சொன்னதைப் போலவே அசத்தலான படைப்பை உருவாக்கியிருக்கிறார்.
இந்தப் பயணத்தில் பல ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் KVN Productions இப்படத்தை மிகவும் அழகாக வடிவமைத்துள்ளது.
இந்தப் படத்திற்காக கியாரா அத்வானியின் உழைப்பு அசாதாரணமானது. கர்ப்பமாக இருந்த காலத்திலும் அவர் இப்படத்திற்காக உழைத்திருக்கிறார்.
நட்சத்திரங்கள் இருக்கிறார்கள், சூப்பர் ஸ்டார்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு ராக்கிங் ஸ்டார் மட்டுமே இருக்கிறார்; அது யாஷ் சார். அவர் திரையுலகை உலகளவிலான உயரத்திற்கு கொண்டு செல்கிறார்.
இந்தப் பிரம்மாண்டமான படைப்பின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்றார்.

“ரசிகையாக இருந்த நான், யாஷுடன் இணைந்து நடித்திருக்கிறேன்” – ருக்மிணி வசந்த்
நடிகை ருக்மிணி வசந்த் பேசுகையில், யாஷுடன் இணைந்து நடித்த அனுபவத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
“வணக்கம் சென்னை! ‘டாக்ஸிக்’ எனக்கு மிகவும் ஸ்பெஷலான திரைப்படம். யாஷ் சார் பலருக்கும் ஒரு உத்வேகம். அதில் நானும் ஒருவர்.
உங்கள் ரசிகையாக இருந்த என்னுடைய பயணம், தற்போது உங்களுடன் இணைந்து நடிக்கும் சக நடிகையாக மாறியிருப்பது மிகவும் சிறப்பானது.
கீது மோகன்தாஸ் மேடம், இப்படியொரு திரைப்படத்தை உருவாக்கும் துணிச்சல் உங்களுக்கு இருக்கிறது. தமிழ் ரசிகர்கள் அளித்து வரும் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி” என்றார்.
“இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய பயணம்” – கியாரா அத்வானி
நடிகை கியாரா அத்வானி, சென்னைக்கு முதன்முறையாக வந்திருப்பதாகவும், ரசிகர்களின் வரவேற்பு தன்னை நெகிழச் செய்ததாகவும் தெரிவித்தார்.
“சென்னைக்கு நான் வருவது இதுதான் முதல் முறை. நீங்கள் அனைவரும் எனக்கு அளித்த வரவேற்பு மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்துவிட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படத்தின் பணிகளைத் தொடங்கினோம். தற்போது படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. தயாரிப்பாளர் வெங்கட் சாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
இந்தப் படத்திற்காக கடினமாக உழைத்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நயன்தாரா ஒரு சிறந்த நடிகை மட்டுமல்ல; அற்புதமான மனிதரும் கூட. என்னுடன் நடித்த அனைத்து சக நடிகர்களும் தங்களது திறமையால் அசத்தியுள்ளனர்.
ஒரு பெண்ணின் கனவு மற்றும் பார்வையின் காரணமாகத்தான் நாம் அனைவரும் இங்கு இருக்கிறோம். அது கீது மோகன்தாஸ் மேடம். இந்திய சினிமா உங்கள் பெயரை என்றென்றும் நினைவில் வைத்திருக்கும்.
‘டாக்ஸிக்’ வெளியான பிறகு யாஷ் சார் இந்திய சினிமாவை உலகளவிலான உயரத்திற்கு கொண்டு செல்லப் போகிறார். இந்தப் படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்” என்றார்.

“டாக்ஸிக் புதிய பாதையை உருவாக்கும்” – வெங்கட் நாராயணன்
தயாரிப்பாளர் KVN Productions நிறுவனத்தின் வெங்கட் நாராயணன் பேசுகையில், ‘ஜனநாயகன்’ படத்தின் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.
“‘ஜனநாயகன்’ திரைப்படத்தை வெற்றிப்படமாக்கிய அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, எனது கடினமான காலகட்டத்தில் எனக்கு ஆதரவாக நின்ற தளபதி விஜய் சாரின் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி.
விஜய் சார் சினிமாவில் இது தனது கடைசி படம் என்று கூறியிருந்தார். அவர் தற்போது திரையில் இல்லாததை மிகவும் வெறுமையாக உணர்கிறேன். எனவே, அவர் மீண்டும் திரையில் நடிக்க வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
‘டாக்ஸிக்’ ஒரு புதிய பாதையை உருவாக்கும் படமாக இருக்கும். கீது மோகன்தாஸ் இப்படத்தை அற்புதமாக உருவாக்கியிருக்கிறார்.
நயன்தாராவுக்கு என்று தனி ஒரு ஆரா இருக்கிறது. அவரது கதாபாத்திரம் திரையில் மிகப்பெரிய மாஸை உருவாக்கும். கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி உள்ளிட்ட அனைவரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
யாஷ் சார் இப்படத்தில் பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது திரைப்பயணத்தில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படமும் ஒரு மைல்கல்லாக அமையும்.
‘டாக்ஸிக்’ முற்றிலும் மாறுபட்ட ஓர் உலகம். அந்த உலகத்திற்குள் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்” என்றார்.

“யாஷ் சாருக்காக மீண்டும் தமிழகம் வந்துள்ளேன்” – சுதேவ் நாயர்
நடிகர் சுதேவ் நாயர் பேசுகையில், தமிழில் தனக்கு கிடைத்த அனுபவங்களை நினைவுகூர்ந்தார்.
“கடைசியாக ‘காட்டான்’ தொடருக்காக தமிழ்நாடு வந்திருந்தேன். விஜய் சேதுபதி சாருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம்.
இப்போது எனக்குப் பிடித்த யாஷ் சாருக்காக மீண்டும் இங்கு வந்திருக்கிறேன். ‘டாக்ஸிக்’ படத்திற்கு முன்பு இருந்த என்னையும், இந்தப் படத்திற்குப் பிறகு உருவாகப் போகும் என்னையும் நானே பார்க்கிறேன்.
இந்தப் படத்தின் நட்சத்திரக் குழுவினரிடம் இருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். நான் இதுவரை பார்த்ததிலேயே மிகவும் உத்வேகம் அளிக்கும் மனிதர் யாஷ் சார். இந்தப் படம் அனைவருக்கும் புதிய அனுபவமாக இருக்கும்” என்றார்.

மூன்று பாடல்கள் எழுதிய விக்னேஷ் சிவன்
பாடலாசிரியரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் பேசுகையில், யாஷ் மீது தனக்கு இருக்கும் ஈர்ப்பை வெளிப்படுத்தினார்.
“இங்கு நிற்பது எனக்கு மிகப்பெரிய பெருமை. யாஷ் சார் நான் மிகவும் ரசிக்கும் ஒரு ஐகான்.
முதலில் இப்படத்திற்காக ஒரு பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் இன்னொரு பாடலுக்கும் வாய்ப்பு கிடைத்தது. மொத்தமாக இப்படத்திற்காக மூன்று பாடல்களை எழுதியுள்ளேன்.
யாஷ் சாருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் மூலம் அவரது புகழ் உலகளவில் இன்னும் பெரிய அளவில் சென்றடையும் என்று நம்புகிறேன்.
கீது மோகன்தாஸ் எனக்கு குடும்ப நண்பர் போன்றவர். இப்படத்தை உருவாக்க அவரிடம் இருந்த தைரியமும் துணிச்சலும் அளப்பரியது. படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.
தமிழ் ரசிகர்களை கவருமா ‘டாக்ஸிக்’?
யாஷுடன் நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சுற்றி உருவாகும் உறவுகள், மோதல்கள், அதிகாரப் போட்டிகள் ஆகியவை ‘டாக்ஸிக்’ திரைப்படத்தை வழக்கமான கேங்ஸ்டர் திரைப்படங்களிலிருந்து மாறுபடுத்தும் அம்சங்களாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
கீது மோகன்தாஸின் தனித்துவமான காட்சியமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகள், கலை இயக்கம், ஒளிப்பதிவு மற்றும் பல அடுக்குகளைக் கொண்ட கதாபாத்திரங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள ‘டாக்ஸிக்’, தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது.
பான்-இந்தியா அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘டாக்ஸிக்’, யாஷின் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களுக்கும் புதிய திரை அனுபவத்தை வழங்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
KVN Productions மற்றும் Monster Mind Creations இணைந்து தயாரித்துள்ள ‘டாக்ஸிக்: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படம் ஆகஸ்ட் 26, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Grand ‘Toxic’ Pre-Release Event Held in Chennai
“Cinema is not divided by Kannada, Tamil or Telugu; it is Indian Cinema” – Yash
Chennai: The much-awaited pre-release event of ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’, starring Rocking Star Yash and directed by National Award-winning filmmaker Geetu Mohandas, was held in a grand manner at the Nehru Indoor Stadium in Chennai.
Produced by KVN Productions and Monster Mind Creations, the film brings together action, the gangster world, family relationships, betrayal and power struggles. The film is set to release worldwide in theatres on August 26, 2026.
As part of the promotional campaign ahead of the worldwide release, the team has been travelling across various cities in India. The Chennai event was organised especially to meet Tamil audiences and promote the Tamil version of the film.
The event witnessed the presence of Yash, Geetu Mohandas, Kiara Advani, Rukmini Vasanth, Huma Qureshi, Sudev Nair, lyricist-director Vignesh Shivan and producer Venkat Narayan, among others. The gathering further fuelled the anticipation surrounding the film among Tamil audiences.
“The love from Tamil audiences has always been immense” – Yash
Addressing the gathering, Yash expressed his gratitude to Tamil audiences for the love and support they have extended to him over the years.
“People of Tamil Nadu, you have always showered immense love on me. The love you gave me when I came here for KGF was unforgettable. I bow to the people of Tamil Nadu for that affection.
When Jana Nayagan was leaked online, it was an extremely painful moment for the producer. But even during that difficult time, the love you showed was unconditional. The love you have for Vijay sir is also like that.
Toxic is a film about curiosity and emotions. It takes us into a completely different world and will be a grand cinematic feast for audiences.
Cinema is not divided into Kannada, Tamil or Telugu. It is Indian Cinema. In that spirit, I believe Toxic will offer a completely new experience to all of you,” Yash said.

“‘Toxic’ will be Yash’s 2.0 version” – Geetu Mohandas
Director Geetu Mohandas spoke about her long journey in cinema and the faith Yash placed in her vision.
“I started my journey in cinema when I was just four years old. When I completed my first film, nobody believed that I would be able to direct a second film. That continued for a long time.
But today, one of India’s biggest stars, Yash sir, believed in me and told me, ‘You do this.’
Yash sir showed me several mass and commercial films, including Padayappa, as references. Toxic is going to be Yash’s 2.0 version.
Thank you to everyone who has been a part of this journey,” she said.
“There is only one Rocking Star – Yash” – Huma Qureshi
Actress Huma Qureshi said that Toxic holds a very special place in her career.
“It has been a long time since I came to Chennai, and coming here is always special for me. Wherever I go, people call me ‘Kannamma’.
Toxic is a very important part of my life. I have spent the last three years working on this film.
When Geetu Mohandas approached me for the film, she did not reveal much about the character. She simply told me, ‘Trust me.’ Just as she promised, she has created something extraordinary.
There were many ups and downs during the journey, but KVN Productions has shaped the film beautifully.
Kiara Advani’s dedication to this film has been extraordinary. She continued to work on the film even during her pregnancy.
There are stars and there are superstars. But there is only one Rocking Star – Yash sir. He is taking cinema to a global level.
I am extremely proud and excited to be a part of this grand creation,” Huma said.

“I went from being a fan to a co-star” – Rukmini Vasanth
Actress Rukmini Vasanth said working alongside Yash has been a special experience.
“Vanakkam Chennai! Toxic is a very special film for me. Yash sir, you are an inspiration to so many people, and I am one of them.
My journey from being your fan to now being your co-star is truly special.
Geetu Mohandas ma’am, it takes tremendous courage to create a film like this. Thank you to the Tamil audience for all the love and support,” she said.
“A woman’s dream and vision brought us all here” – Kiara Advani
Actress Kiara Advani, who attended the Chennai event for the first time, spoke about the warm reception she received from the audience.
“This is my first time in Chennai. The welcome you have given me has truly touched me.
We started working on this film two years ago. Now, the film is just two days away from release. I would also like to wish producer Venkat sir a very happy birthday.
I would like to thank our cinematographer, music composer and every technician who worked tirelessly for this film.
Nayanthara is not only a wonderful actress but also an amazing human being. All my co-stars have been incredible and have brought their own strengths to the film.
We are all here because of the dream and vision of a woman – Geetu Mohandas ma’am. Indian cinema will remember your name forever.
After the release of Toxic, Yash sir is going to take Indian cinema to a global level. This film will offer audiences a completely new experience,” Kiara said.
“‘Toxic’ will create a new path” – Producer Venkat Narayan
Producer Venkat Narayan of KVN Productions thanked audiences for their support and spoke about his experience with Jana Nayagan.
“I thank everyone who made Jana Nayagan a blockbuster success. I especially want to thank Thalapathy Vijay sir’s fans who stood by me during one of the most difficult phases of my journey.
Vijay sir had said that this would be his last film in cinema. I feel a great emptiness seeing him away from the big screen. I once again request Vijay sir to return to acting.
Toxic will create a new path. Geetu Mohandas has crafted the film wonderfully, and it will provide an entirely different experience.
Nayanthara has a unique aura, and her character has enough power to create a massive impact on screen. Kiara Advani, Rukmini Vasanth, Huma Qureshi and everyone who worked on the film have made incredible contributions.
Yash sir has portrayed multiple dimensions through his character in the film. You are truly extraordinary, sir, and an inspiration to everyone. Every film in your career will become a milestone.
Toxic is a completely different world. We warmly welcome all of you into the world of Toxic,” he said.
“I have returned to Tamil Nadu for Yash sir” – Sudev Nair
Actor Sudev Nair recalled his earlier association with Tamil cinema and expressed his excitement about working with Yash.
“The last time I came to Tamil Nadu was for the series KaattAan. It was a project I really enjoyed, and working with Vijay Sethupathi sir was unforgettable.
Now I have returned here for Yash sir, whom I admire greatly.
I can see a difference between the person I was before Toxic and the person I am going to become after Toxic. I have learned so much from the talented cast of this film.
Yash sir is one of the most inspiring people I have ever met. I believe this film will be a completely new experience for audiences,” he said.
Vignesh Shivan reveals he penned three songs
Lyricist and director Vignesh Shivan spoke about his association with the film and his admiration for Yash.
“It is a great honour for me to stand here. Yash sir is an icon whom I admire immensely.
Initially, I got the opportunity to write one song for the film. Later, I was given the opportunity to write another, and eventually I wrote three songs for Toxic.
Yash sir has fans in every corner of India. I believe Toxic will take his popularity to an even greater global level.
Geetu Mohandas is like a family friend to me. The courage and conviction she has shown in making this film are remarkable. I wish the film tremendous success,” he said.
A new cinematic world awaits audiences
Toxic features Yash in the lead, alongside prominent actors including Nayanthara, Kiara Advani, Tara Sutaria, Rukmini Vasanth and Huma Qureshi in pivotal roles.
The relationships, conflicts and power struggles surrounding the characters are expected to set the film apart from conventional gangster dramas.
Geetu Mohandas has created a dark, intense and visually grand world through her distinctive storytelling and visual approach. The film promises elaborate action sequences, ambitious production design, striking cinematography and layered characters, offering audiences a large-scale theatrical experience.
Shot simultaneously in English and Kannada, Toxic is being released in dubbed versions across Tamil, Hindi, Telugu, Malayalam and other languages.
With expectations running high across the country, the film is expected to appeal not only to Yash’s massive fan base but also to audiences looking for a fresh pan-Indian cinematic experience.
Produced by KVN Productions and Monster Mind Creations, Toxic: A Fairy Tale for Grown-Ups is scheduled to release worldwide in theatres on August 26, 2026.
