
தனுஷ் இயக்குனர் கௌதம் மேனனனுடன் முதன் முறையாக இணைந்து இருக்கும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா இந்த படத்தின் படபிடிப்பு முதலில் முழு வேகமாக போனது பின்பு அப்படியே கொஞ்சம் வேகம் குறைந்தது பின்னர் தனுஷ்க்கும் இயக்குனருக்கும் சண்டை என்று தகவல்கள் வெளியாகின பின்னர் இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்று ஒரு கேள்வி எழும்பியது. பின்னர் ஒரு பாடல் மட்டும் இசையமைப்பாளர் பெயர் போடமாலே வெளியானது இதனால் கொஞ்சம் ஊடகங்களில் கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டது , இதனால் இயக்குனர் கௌதம் மேனன் எல்லோர் கண்துடைப்புக்கு தர்புகா சிவா என்று கூறினார்.ஆனால் அதன் பின்னர் ஒரு பாடல் இசையமைப்பாளர் பெயர் இல்லாமல் தான் வெளியானது தற்போது மூன்றாவது பாடல் வெளியாக போகிறது ஆனால் இன்னும் அவர் இசையமைப்பாளர் யார் என்று உறுதியாக சொல்லவில்லை.
தமிழக ரசிகர்கள் உள்ளங்களில் தற்போது காட்டுத் தீ போல பரவி வரும் ஒரு கேள்வி, தனுஷ் நடிக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது தான்
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் மற்றும் ‘மறு வார்த்தை பேசாதே’ பாடலும் ரசிகர்கள் மத்தியிலும், இசை பிரியர்கள் மத்தியிலும் அமோக பாராட்டுகளை பெற ஆரம்பித்ததுமே, இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை தேடும் பணியில் ரசிகர்கள் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் தனுஷ், – மேகா ஆகாஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
‘தள்ளி போகாதே’ புகழ் தாமரையின் வரிகளில், சிட் ஸ்ரீராமின் மெய் சிலிர்க்கும் குரலில் உதயமான ‘மறு வார்த்தை’ பாடல் , இசை பிரியர்கள் மட்டுமின்றி பொதுவான ரசிகர்களின் உள்ளங்களையும் கவர்ந்து சென்று இருக்கின்றது.
Mr. X அவர்களை எப்படியாவது கண்டு பிடித்தாக வேண்டும் என்று ரசிகர்கள் இருக்கும் இந்த நிலையில், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இசையமைப்பாளர் ‘Mr. X’ அவர்களை சமுக வலைத்தளங்களுக்கு அறிமுகபடுத்தி இருக்கிறார்.
இன்னும் மூன்று நாட்களில் ‘நான் பிழைப்பேனோ’ என்னும் இந்த படத்தின் மற்றொரு பாடல் வெளியாக இருக்கின்றது. ஆகவே இந்த மூன்று நாட்கள் வரை தான் Mr. X சமுக வலைத்தளங்களில் செயல்படுவார்.