Thursday, March 12
Shadow

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுஜா உண்மை முகம் வெளிப்படும் சொன்னது யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தது முதலே சுஜாவை நன்றாக கவனித்தால் தெரியும். அவர் ஜெயிப்பதற்காக என்னென்னவோ தடுகிதத்தம் எல்லாம் செய்து பார்க்கிறார். ஆரம்பத்தில் ஓவியா பார்முலாவை கையில் எடுத்து பார்த்தார். அது எடுபடவில்லை.

இப்போது சூழ்ச்சியை கையில் எடுத்து உள்ளார். இது கடந்த வாரம் நடந்த கார் விளையாட்டில் தெரிய வந்தது. போட்டியில் வெற்றி பெறுவதற்காக அவர் நடந்து கொண்ட விதமே அதற்கு எடுத்துக்காட்டு.

மற்றவர்கள் மீது கோபப்படுதல், வெறுபேற்றுதல், நடிப்பது போன்றவற்றை கையில் எடுத்துள்ளார்.

நேற்று கூட கோல்டன் டிக்கெட் சினேகனுக்கு சென்றதை அவரால் பொறுத்து கொள்ள முடியவில்லை.

இது அவர் நேற்று பார்த்த பார்வையில் இருந்தே தெரிகிறது. மேலும் இன்றைய ப்ரமோவில் கூட இதனை வெளிப்படுத்தி உள்ளார்.

இன்றைய டாஸ்கில் பலூன் ஊதும் போட்டி வைக்கப்படுகிறது. அப்போது அடிக்கடி நேர்மையற்ற விளையாட்டை என்னால் விளையாட முடியாது என்கிறார்.

இது கடந்த வாரம் சினேகன் சொன்ன சொல். கடந்த முறை மக்களின் மனம் கவர்ந்தவர்கள் சொன்ன வார்த்தைகளை எல்லாம் இப்போது சுஜா பயன்படுத்தி வருகிறார்.

இதற்கு எல்லோரிடமும் உரசி உரசி விளையாண்டவர், இன்று ஆரவ் லேசாக உரசியதற்கே கோப்படுகிறார்.

என்னிடம் உரசாமல் நில்லுங்கள் என்கிறார். அதற்கு ஒட்டாமல் உரசால் இருக்க வேண்டும் என்றால் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்கிறார்.

இப்போது சுஜா நடந்து கொள்ளும் விதத்தை பார்த்தால் அவர் வெற்றி பெற எந்த நிலைக்கும் செல்வார் என்பது மட்டும் நிச்சயம் தெரிகிறது.

Leave a Reply