Friday, February 14
Shadow

Tag: விமர்சனம்

மெமரீஸ் விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review, Top Highlights
மிகப்பெரிய நட்சத்திரங்களின்றி புதுமுக மற்றும் வளர்ந்து வரும் நடிகர்கள் மற்றும் கலைஞர்களை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ‘மெமரீஸ்’ படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். 8 தோட்டாக்கள், ஜீவி, வனம் உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்து, நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் நடிகர், வெற்றி. இவர் ஹீரோவாக நடித்துள்ள “மெமரீஸ்” எனும் திரைப்படம் சைக்காலஜி-த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. ஷ்யாம் என்ற மலையாள இயக்குநர் இப்படத்தினை டைரக்டு செய்துள்ளார். கவாஸ்கர் அவினாஷின் இசையில் படம் உருவாகியுள்ளது. நடிகர் ரமேஷ் திலக் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மெமரீஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனக்கு தெரிந்த நபர் ஒருவரின் வாழ்வில் மெமரீஸினால் ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வருகிறார், ஹீரோ. வெங்கி என்பவரின் வாழ்வில்தான் அந்த சம்பவம் என கூறுகிறார். ஃப்ளேஷ் பேக்கில் கதை நகர்கிறது. ஒரு பா...
காரி திரை விமர்சனம்  (நம் சமுதாயத்தின் அங்கீகாரம்)  (Rank 4.5/5)

காரி திரை விமர்சனம் (நம் சமுதாயத்தின் அங்கீகாரம்) (Rank 4.5/5)

Shooting Spot News & Gallerys
நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியாகியுள்ள காரி படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இரண்டு கிராமங்களுக்குப் பொதுவான ஒரு கோயிலை நிர்வகிக்கும் பொறுப்புக்குப் போட்டி ஏற்படுகிறது. அதற்காக ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தி அதில் எந்த ஊர் வெல்கிறதோ? அந்த ஊருக்கே கோயில் நிர்வாகம் என்று முடிவாகிறது. அதுமட்டுமின்றி வறட்சியின் பிடியில் இருக்கும் அந்த கிராமத்தை இராமநாதபுரத்தின் குப்பைத் தொட்டியாக மாற்ற முயலும் அரசாங்கம், அடங்காத காளைகளை அடிமாடாக்கி சுகம் காணும் மாட்டிறைச்சி நிறுவனத்தினரின் ஆணவ வெறி ஆகியனவும் அந்தக் கிராமத்தை மிரட்டுகிறது. இவற்றை எப்படி அந்தக் கிராமம் எதிர்கொண்டது என்பதை மண்மணத்தோடு சொல்லியிருக்கிறார்கள். சென்னையில் பந்தயக்குதிரை ஓட்டுபவராக அறிமுமாகிறார் சசிகுமார். பின்னால் காளைகளோடு உறவாடுவதற்கான முன்னோட்டமாக அது அமைந்திருக்கிறது. தானுண்டு தன் வேலையுண்...

‘யசோதா’ திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

Shooting Spot News & Gallerys
சமந்தா முக்கிய முன்னணி கேரக்டரில் நடித்த 'யசோதா' திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். இன்று இருக்கும் அவசர உலகில் வாடகைத்தாய் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அதன் பின்னணியில் இருக்கும் மர்மங்களை த்ரில்லர் ஜானரில் வெளிப்படுத்தும் கதையே 'யசோதா' ஆகும். இந்த வாடகைத்தாய் விவகாரத்தில் சமந்தா எப்படி சிக்கிக் கொள்கிறார், அதில் இருக்கும் பின்னணியின் உண்மைகள் வெளிச்சம் செய்வது தான் திரைக்கதையாக உள்ளது. த்ரில்லர் கதைக்கு உரிய சஸ்பன்ஸ் மற்றும் த்ரில்லரை இறுதிவரை கொண்டுவந்தது தான் 'யசோதா' படத்திற்கு பலமாகும். ஒரு கற்பழிப்பு மற்றும் கொலையின் மர்மத்தில் ஆரம்பத்தில் கதை மெதுவாக நகர்ந்தாலும் போக்கில் தன் விருவிருப்பைக் கூட்டி செல்வது ரசிக்கும்படி உள்ளது. இந்த கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக சம்பத் வருகிறார். பணத்திற்காக வாடகைத்தாயாக இருக்க ஒத்துக்கொள்ளும் சமந்தா, பின் இதில் இருக்கும்...
பனாரஸ் – திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

பனாரஸ் – திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Shooting Spot News & Gallerys
ஓர் அழகான காதல்கதையில் கொஞ்சம் சிம்புவின் மாநாடு படம் போல் டைம்லூப் வகை திரைக்கதையையும் கலந்து வெளிவந்திருக்கும் படம் பனாரஸ். நாயகன் ஜையீத்கான், புதுநடிகர் போல் இல்லாமல் எல்லாக் காட்சிகளிலும் மிக இயல்பாக நடித்திருக்கிறார். நடனம் மற்றும் சண்டைக்காட்சிகளும் விதிவிலக்கல்ல. காலமாற்றம் காரணமாகக் குழம்பி நிற்கும் நேரங்களிலும் தேர்ச்சி பெறுகிறார். நாயகி சோனல் மாண்ட்ரியோ அழகும் இளமையும் துள்ளத் துள்ள இருக்கிறார். கங்கை நதியில் படகில் அவர் பாடிக்கொண்டே வரும் காட்சி நன்று. டெத் போட்டோகிராபர், ஆட்டோ ஓட்டுநர், நாயகனின் நண்பர் எனப்பலமுகம் காட்டியிருக்கும் சுஜய்சாஸ்த்ரி கவனம் ஈர்க்கிறார். அவருக்குள் இருக்கும் சோகத்தை வெளிப்படுத்தும் காட்சியிலும் கவர்கிறார். படத்தின் பிளஸ்: அச்யுத்குமார், சப்னாராஜ்,தேவராஜ் ஆகியோரின் நடிப்பு, அத்வைத குருமூர்த்தியின் ஒளிப்பதிவு, அஜனீஷ்லோக்நாத் இசை படத்தின் மைன்ஸ்: ...

காலங்களில் அவள் வசந்தம் திரை விமர்சனம் (3.5/5)

Shooting Spot News & Gallerys
ராகவ் மிர்தாத் இயக்கத்தில், நடிகர்கள் கெளசிக், அஞ்சலி நாயர், ஹிரோஷினி நடிப்பில் வெளியாகியுள்ள காலங்களில் அவள் வசந்தம் திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். நம்ம ஹீரோ கௌஷிக் ஐடி கம்பெனியில் வேலை செய்கின்றார். இவரின் குடும்பம் உயர்நடுத்தர வகுப்பைச் சேர்ந்த குடும்பமாகும். வீட்டிற்கு செல்ல பிள்ளையான நம்ம ஹீரோ திரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர். காதல் என்பது திரைப்படங்களில் வருவதுதான். அது மாதிரியான ஒரு வாழ்க்கையை தானும் வாழ வேண்டும் என நினைத்து ஒரு பெண்ணை எப்படி காதலிக்க வேண்டும் என்பதை எழுதி வைத்து சில பெண்களை காதலிக்கின்றார். ஆனால் அந்த காதல் ஒரு கட்டத்தில் பிரிவில் முடிகின்றது. அதன் பின் நம்ம ஹீரோ அப்பாவின் நெருங்கிய நண்பர் மகள் அஞ்சலி நாயர் தனது குடும்பத்தோடு நம்ம ஹீரோ வீட்டிற்கு வராங்க. நம்ம ஹீரோவை பார்த்ததும் அஞ்சலி காதலில் விழுகின்றார். பின் அவரே நேரடியாக கவுசிக்கிடம் திரும...

படவெட்டு திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

Shooting Spot News & Gallerys
லிஜு கிருஷ்ணா இயக்கத்தில், நிவின் பாலி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் மலையாளப் படம் ‘படவெட்டு’ (Padavettu) படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். விவசாயத்தை நம்பியிருக்கும் கிராமத்தில், கிராம மக்களின் தேவைகளை கிராம சபை நிர்வாகிகள் பூர்த்தி செய்து கொடுக்கிறார்கள். இதற்கிடையே, மக்களுக்கு இலவச திட்டங்களை அறிவித்து அந்த கிராமத்தில் காலூன்றும் அரசியல் கட்சியின் தலைவர், அந்த கிராமத்து விவசாய நிலங்களை அபகரிக்க திட்டம் போடுகிறார். அந்த அரசியல்வாதியின் திட்டத்தின் துவக்கமாக இருக்கும் நாயகன் நிவின் பாலி, ஒரு கட்டத்தில் பொருத்தது போதும் என்று பொங்கி எழ, அந்த அரசியல்வாதியும், அவருடைய திட்டமும் என்னவானது? என்பதை சொல்வது தான் ‘படவெட்டு’. விபத்தினால் வாழ்க்கையை தொலைத்த தடகள வீரரகாக அமைதியான நடிப்பை வெளிப்படுத்திருக்கும் நிவின் பாலி, அரசியல்வாதிக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கையில் ஆக்ரோஷமாக நடித...

பிரின்ஸ் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Movie Posters
சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படம் இன்று வெளியாகியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்தப் படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம். தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் தமிழ் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சத்யராஜ், பிரேம்ஜி அமரன் மற்றும் உக்ரைன் நடிகை மரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தன் வாரிசுகள் காதல் திருமணம்தான் செய்துகொள்ள வேண்டும் என்று சத்யராஜ் எண்ணுகிறார். ஆனால் தன் வாரிசுகளின் காதலை எதிர்கிறார். அது எதனால் என்பதை நகைச்சுவை பின்னணியில் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் அனுதீப். பாண்டிச்சேரி அருகில் இருக்கும் பிரிட்டிஷ் கிராமத்தில் வசிக்கும் நாயகிக்கும், தேவனக்கோட்டையை சேர்ந்த இளைஞனுக்கும் இடையே காதல் மலர்கிறது. அதற்கு என்ன தடை வந்தது? காதலில் வெற்றி அடைந்தார்களா என்ற இடத்தில் படம் முடிகிறது. சிவகார்த்திகேயன் தன்னுடைய வழக்கமான பார்முலாவான க...

வெந்து தணிந்தது காடு திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

Shooting Spot News & Gallerys
தந்தையில்லாமல் தாய் ராதிகா மற்றும் தங்கையுடன் கிராமத்தில் வாழ்த்து வருகிறார் முத்துவீரன் { சிலம்பரசன் }. காட்டு வேலை செய்து வரும் சிம்பு ஒரு நாள் காட்டுக்குள் பரவிய தீயில் சிக்கிக்கொண்டு, போராடி காயங்களுடன் அதிலிருந்து தப்பிக்கிறார். காட்டை சிம்பு தான் கொழித்துவிட்டதாக நினைத்துக்கொண்டு காட்டின் முதலாளி சிம்புவிடம் நஷ்டத்திற்கு பணம் கேட்டு வந்து நிற்கிறார். அதெல்லாம் தர முடியாது என்று சிம்பு சொல்ல, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடக்கிறது. அந்த வாக்குவாதத்தில் பேசாமல் போய்விட இல்லையெனில் உன்னை கொன்று விடுவேன் என்று முதலாளியை பார்த்து சிம்பு கூற, அது தாய் ராதிகாவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுக்கிறது. ஏற்கனவே சிம்புவின் ஜாதகத்தில் அவன் கண்டிப்பாக கொலை செய்வான் என்று இருக்கிற காரணத்தினால், இனி தன் மகன் இந்த ஊரில் இருந்தால் தவறான பாதையில் சென்று விடுவானோ என்று எண்ணி சிம்புவின் மாமா அதாவது...

டைரி திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

Shooting Spot News & Gallerys
நடிகர் அருள்நிதி, 'டி ப்ளாக்', 'தேஜாவு' என தொடர்ந்து திரில்லர் ஜெனரிலான திரைக்கதைகளை தெரிவு செய்து நடித்து வருகிறார். ஏன்? என்ற கேள்விக்கு அவர் தான் பொருத்தமான பதிலை அளிக்க வேண்டும். இருப்பினும் திரில்லர் திரைக்கதைகளில் இருக்கும் சுவாரசியம் இந்த ‘டைரி’யிலும் இருந்ததா? இல்லையா? என்பதை இனி காண்போம். சீனாவில் 1995 ஆம் ஆண்டில் மாயமாக மறைந்த 375 என்ற இலக்கம் உள்ள பேருந்தை மையப்படுத்தி, ஏராளமான கதைகள் உருவாகி இருக்கிறது, தமிழில் முதன்முதலாக ‘டைரி’ எனும் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. காவல் அதிகாரிக்கான பணி நியமனத்திற்கு முன் பயிற்சி காலகட்டத்தில், பல ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற குற்ற வழக்கை ஒன்றை மீண்டும் தூசு தட்டி... அவை சரியான முறையில் தான் விசாரணை நடைபெற்று இருக்கிறதா? அல்லது ஏதேனும் புதிய தடயங்கள் அல்லது குற்றவாளிகளை இனம் காண முடிகிறதா? எனும் கோணத்தில் வழக்கு ஒன்றை இவர் தெரிவு செய்கிறார். அ...

ஜிவி 2 திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Shooting Spot News & Gallerys
ஜிவி படத்தின் தொடர்ச்சியாக வெளியாகியுள்ளது ஜிவி 2. சென்னையில் பேச்சுலராக தங்கிக்கொண்டு வேலை செய்யும் ஹீரோ வெற்றியும், கருணாகரனும் ஒரே அறையில் தங்குகிறார்கள். அவர்களது ஹவுஸ் ஓனரான ரோகினி கண் பார்வையற்ற தனது மகளின் திருமணத்திற்காக 50 சரவன் நகை வாங்கி அதை பீரோவில் வைக்க, அந்த பீரோ சாவி எதிர்ப்பாரதவிதமாக தொலைந்துவிடுகிறது. தொலைந்த சாவி ஹீரோ வெற்றியிடம் கிடைக்க, வருமையினால் விரக்தியில் இருக்கும் வெற்றி அந்த சாவியை பயன்படுத்தி நகையை கொள்ளையடித்து விடுவதோடு, தனது புத்திசாலித்தனத்தால் போலீசிடம் சிக்கிக்கொள்ளாமல் எஸ்கேப் ஆகிறார். நகை காணாமல் போனது குறித்து போலீஸ் தொடர்ந்து விசாரித்தாலும், வெற்றி தனது சாதுர்யத்தால் போலீசிடம் சிக்காமல் எஸ்கேப் ஆக, கதையில் திடீரென்று ஒரு மாற்றம். அதாவது, ஹவுஸ் ஓனரான ரோகினியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் போல, ஹீரோ வெற்றியின் வாழ்க்கையில் நடக்கிறது. இதை ஒருவித அறிவ...