Friday, May 16
Shadow

Tag: #chekkacivanthavaanam#simbu #str #vijaysethupathy #aravidsamy #arunvijay #aditirao #arrahuman #vairamuthu #santhoshsivan

செக்க சிவந்த வானம் – திரைவிமர்சனம் ( அழகிய வானம் ) Rank 4.5/5

செக்க சிவந்த வானம் – திரைவிமர்சனம் ( அழகிய வானம் ) Rank 4.5/5

Review, Top Highlights
செக்க சிவந்த வானம் படத்தின் கதை: ஒரு டான் கொலை செய்யப்படுகிறார். அவரை கொலை செய்தவர் யார் என்பதை கண்டிபிடிக்க அவரது மூன்று மகன்களும் போராடுவதே இந்த படத்தின் கதையாகும். வயதான டான் சேதுபதி (பிரகாஷ் ராஜ்), அவரது மூன்று மகன்கள் வரதன் (அர்விந்த் சாமி), இவர் அதிக கோபம் கொள்ளும் குணம் உடையவர், இரண்டாவதாக தியாகு (அருண் விஜய்) இவர் ஒரு கருப்பு குதிரை போன்றவர், மூன்றாவதாக எதி( எஸ்டிஆர்) குறைந்த பிரபலம் கொண்டவர். இதற்கு பின்னால் என்ன உள்ளது என்பதை கண்டுபிடிப்பதே படத்தின் கதையாகும், சஸ்பென்ஸ் தொடர்ந்து வரும் நிலையில், சின்னப்பதாஸ் (தியாகரஜன்) அறிமுகமாகிறார். இந்த படத்தில் வரும் காட்பாதர், எந்த தவறும் செய்யாதவராக இருக்கிறார். படத்தில் இயக்குனர் மணிரத்தினத்தின் டைரக்டர் டச் பல இடங்களில் பிரதிபலிக்கிறது. படத்தின் முதல் பாதி, குறிப்பாக பல்வேறு கேரக்டர் அறிமுகம் செய்வதிலும் சேதுபதி மரணம் குறித்தும...
தமிழ் தெரியாதது ஒரு விதத்தில் நல்லது சொல்கிறார் அதிதி ராவ்

தமிழ் தெரியாதது ஒரு விதத்தில் நல்லது சொல்கிறார் அதிதி ராவ்

Latest News, Top Highlights
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ் ஹைதரி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள செக்கச் சிவந்த வானம் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அதிதி அரவிந்த்சாமியுடன் மேடைக்கு வந்து பேசினார்.மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்தை அடுத்து செக்கச் சிவந்த வானம் படத்திலும் நடித்துள்ளார் அதிதி. காற்று வெளியிடை ரிலீஸான போதே மீண்டும் மணி சார் இயக்கத்தில் நடிக்க ஆவலாக உள்ளேன் என்று தெரிவித்தார் அதிதி. அதை மனதில் வைத்து தன்னுடைய அடுத்த படத்திலும் அதிதிக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.மணிரத்னம். சும்மா சொல்லக் கூடாது காற்று வெளியிடை படத்தில் அதிதி தனது நடிப்பால் அசத்தியிருந்தார். இந்திக்கார பெண்ணான அதிதி தமிழ் கற்றுக் கொண்டுள்ளார். முழுமையாக பேச முடியாவிட்டாலும் அவரின் முயற்சியை பாராட்ட வேண்டும். எ...
செக்கசிவந்த வானம் முதல் பார்வை வரதனாக அரவிந்த் சாமி

செக்கசிவந்த வானம் முதல் பார்வை வரதனாக அரவிந்த் சாமி

Latest News, Top Highlights
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘செக்கச்சிவந்த வானம்’. மல்ட்டி ஸ்டாரர் படமான இதில் அரவிந்த் சாமி, சிம்பு, ஜோதிகா, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து இப்படத்தைத் தயாரித்து வருகின்றன. படத்தின் ஷூட்டிங் முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 28-ம் தேதி படம் ரிலீஸாக இருக்கிறது. தெலுங்கில் இந்தப் படம் ‘நவாப்’ என்ற பெயரில் ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் என நான்கு பேரின் லுக்கும் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அரவிந்த் சாமியின் லுக் முதன்முதலாக வெளியாகியுள்ளது. அதில், அவருடைய பெயர் ‘வரதன்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ள...
மின்னல் வேகத்தில் வளரும் மணிரத்தினத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’

மின்னல் வேகத்தில் வளரும் மணிரத்தினத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’

Latest News, Top Highlights
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. அரவிந்த் சாமி, சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்து வருகின்றன. ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்யும் இந்தப் படத்தின் ஷூட்டிங், கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இடையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் போராட்டத்தில் நிறுத்தப்பட்ட ஷூட்டிங், தற்போது வேகவேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில், தன்னுடைய போர்ஷன் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் அரவிந்த் சாமி. “செக்கச் சிவந்த வானம் படத்தில் என்னுடைய வேலை ...
தமிழ் சினிமாவின் பிரமாண்ட கூட்டணி நடிக்கும் செக்க சிவந்த வானம் படப்பிடிப்பு இன்று துவக்கம்

தமிழ் சினிமாவின் பிரமாண்ட கூட்டணி நடிக்கும் செக்க சிவந்த வானம் படப்பிடிப்பு இன்று துவக்கம்

Latest News, Top Highlights
`காற்று வெளியிடை' படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக இருக்கும் படத்திற்கு `செக்க சிவந்த வானம்’ என்று தலபை்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படக்குழுவினர் குறித்த விவரம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கும் நிலையில், இரண்டு மாதங்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. பின்னர் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் முடிந்து வருகிற ஜூலை மாதம் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. குடும்ப படமாக உருவாக இருக்கும் இந்த படம் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் என இந்த 4 சகோதரர்களுக்கு இடையே நடக்கும் கதையை மையப்படுத்தி உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக அருண் விஜய் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் பகத் பாஷில் ஒப்பந்தமாக...
மெட்ராஸ் டாக்கீஸ் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் “செக்கச்சிவந்த வானம்”

மெட்ராஸ் டாக்கீஸ் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் “செக்கச்சிவந்த வானம்”

Latest News, Top Highlights
மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது. "செக்கச்சிவந்த வானம்" எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அரவிந்த்சாமி, சிலம்பரசன் (STR), விஜய்சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். வரும் 12ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த படத்துக்கு இசை ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்கிறார்...