
செக்க சிவந்த வானம் – திரைவிமர்சனம் ( அழகிய வானம் ) Rank 4.5/5
செக்க சிவந்த வானம் படத்தின் கதை: ஒரு டான் கொலை செய்யப்படுகிறார். அவரை கொலை செய்தவர் யார் என்பதை கண்டிபிடிக்க அவரது மூன்று மகன்களும் போராடுவதே இந்த படத்தின் கதையாகும். வயதான டான் சேதுபதி (பிரகாஷ் ராஜ்), அவரது மூன்று மகன்கள் வரதன் (அர்விந்த் சாமி), இவர் அதிக கோபம் கொள்ளும் குணம் உடையவர், இரண்டாவதாக தியாகு (அருண் விஜய்) இவர் ஒரு கருப்பு குதிரை போன்றவர், மூன்றாவதாக எதி( எஸ்டிஆர்) குறைந்த பிரபலம் கொண்டவர். இதற்கு பின்னால் என்ன உள்ளது என்பதை கண்டுபிடிப்பதே படத்தின் கதையாகும், சஸ்பென்ஸ் தொடர்ந்து வரும் நிலையில், சின்னப்பதாஸ் (தியாகரஜன்) அறிமுகமாகிறார்.
இந்த படத்தில் வரும் காட்பாதர், எந்த தவறும் செய்யாதவராக இருக்கிறார். படத்தில் இயக்குனர் மணிரத்தினத்தின் டைரக்டர் டச் பல இடங்களில் பிரதிபலிக்கிறது.
படத்தின் முதல் பாதி, குறிப்பாக பல்வேறு கேரக்டர் அறிமுகம் செய்வதிலும் சேதுபதி மரணம் குறித்தும...