“திரைத்துறைக்காக மீண்டும் முழுநேர நடிப்பில் கவனம் செலுத்துங்கள்” – நடிகர் அஜித்குமாருக்கு மன்சூர் அலிகான் உருக்கமான வேண்டுகோள்
"திரைத்துறைக்காக மீண்டும் முழுநேர நடிப்பில் கவனம் செலுத்துங்கள்" – நடிகர் அஜித்குமாருக்கு மன்சூர் அலிகான் உருக்கமான வேண்டுகோள்
சென்னை:
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்குமாரை மீண்டும் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று நடிகர் மன்சூர் அலிகான் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வேண்டுகோள் தற்போது திரையுலக வட்டாரங்களிலும், ரசிகர்கள் மத்தியிலும் கவனம் பெற்று வருகிறது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு துறை மட்டுமல்ல; லட்சக்கணக்கான தொழிலாளர்கள், கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் மிகப்பெரிய துறை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
"அஜித்குமார் அவர்களை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் நேசிப்பதற்கும், அவரை உச்ச நட்சத்திரமாக உயர்த்தியதற...









