கிராமிய மண்வாசனையை திரையில் கொண்டுவரும் ‘பூ காய் கனி’… சொக்காயி அம்மன் கோவிலில் பூஜையுடன் கோலாகலமாக படப்பிடிப்பு தொடக்கம்!
கிராமிய மண்வாசனையை திரையில் கொண்டுவரும் 'பூ காய் கனி'... சொக்காயி அம்மன் கோவிலில் பூஜையுடன் கோலாகலமாக படப்பிடிப்பு தொடக்கம்!
தமிழ் சினிமாவில் கிராமிய வாழ்வியலையும், மண்ணின் உணர்வுகளையும் மையமாகக் கொண்டு உருவாகும் புதிய திரைப்படங்களில் ஒன்றாக உருவாகி வருகிறது 'பூ காய் கனி'. இயக்குநர் வெற்றி வீரன் மகாலிங்கம் இயக்கத்தில், பழையனூர் சந்தனம் படகம்பெனி சார்பில் ராஜேஸ்வரி வெற்றிவீரன் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்தில் உள்ள இலுப்பைகுளம் சொக்காயி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜையுடன் இனிதே தொடங்கியது.
திரைப்படத்தின் தொடக்க விழாவில் படக்குழுவினர், கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு படத்திற்கு வெற்றியை வேண்டி வழிபட்டனர். பாரம்பரிய மரபுகளை மதித்து, ஆன்மிகச் சூழலில் தொடங்கிய இந்த விழா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்தப் படத்தில் இளம் ...
