“எல்லோரையும் நம்பாதே” – வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்த ரவி மோகன்; மனதை தொட்ட ‘ஜாலி ஓ ஜிம்கானா’ எபிஸோட்!
“எல்லோரையும் நம்பாதே” – வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்த ரவி மோகன்; மனதை தொட்ட ‘ஜாலி ஓ ஜிம்கானா’ எபிஸோட்!
சென்னை:
நடிகர் ரவி மோகனின் திரை வாழ்க்கை, குடும்ப பாசம், நட்பு மற்றும் வாழ்க்கைப் பாடங்கள் ஆகியவற்றை ரசிகர்களுக்கு நெருக்கமாக எடுத்துக்காட்டிய ஒரு உணர்வுபூர்வமான எபிஸோடாக SUN NXT-இல் ஒளிபரப்பாகும் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியின் ஐந்தாவது பகுதி அமைந்தது.
பொதுவாக ரசிகர்கள் திரையில் பார்க்கும் ரவி மோகனை விட, மனிதராகவும் மகனாகவும் தந்தையாகவும் நண்பராகவும் இருக்கும் அவரது உண்மையான முகத்தை இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்தியது. நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே, தனது இளம் வயதிலிருந்த ரவி மோகனுக்கு இன்று அறிவுரை சொல்ல வேண்டுமெனில் என்ன சொல்வீர்கள் என்ற கேள்விக்கு, “எல்லோரையும் நம்பாதே” என்ற ஒற்றை வரி பதிலை அவர் அளித்தார். அந்த பதில் அவரது வாழ்க்கைப் பயணத்தில் சந்தித்த அனுபவங்களின் பிரதிபல...
