பிரம்மாண்ட விலங்கு எலும்புக்கூட்டுக்குள் அமீர்… மாரி செல்வராஜ் வழங்கும் ‘மாகாளி’ படப்பிடிப்பு தொடக்கம்
பிரம்மாண்ட விலங்கு எலும்புக்கூட்டுக்குள் அமீர்... மாரி செல்வராஜ் வழங்கும் ‘மாகாளி’ படப்பிடிப்பு தொடக்கம்!
சமூகத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்வியலையும், பேசப்படாத பிரச்சினைகளையும் தனது படைப்புகளின் மூலம் திரையில் அழுத்தமாக பதிவு செய்து வரும் இயக்குநர் மாரி செல்வராஜ், தற்போது புதிய திரைப்படமான ‘மாகாளி’யை வழங்குகிறார். நடிகர் அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
மாரி செல்வராஜிடம் இணை இயக்குநராக பணியாற்றிய எஸ். பி. அரவிந்த், ‘மாகாளி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தின் கதையையும் அவரே எழுதியுள்ளார். சமூகத்தில் நிலவி வரும் முக்கியமான ஒரு பிரச்சினையை மையமாகக் கொண்டு, வலிமையான கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் கே. கருணாமூர்த்தி...








