
சுச்சி லீக்ஸ் விவகாரத்தால் தமிழ் சினிமாவே அதிர்ச்சி அலையில் மிதந்துக்கொண்டிருக்கிறது. அடுத்து யார் புகைப்படம் வெளிவருமோ என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு அதிரடியாக மூடப்பட்டது.
உண்மையில் சுசித்ராதான் ட்வீட் போட்டாரா அல்லது அவர் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதா என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஒருபக்கம் சுசித்ராவின் கணவர் கார்த்திக், சுசித்ராவுக்கு மனநலம் சரியில்லை அதனால்தான் இப்படி செய்கிறார் என கூறினார்.
இன்னொரு பக்கம் சுசித்ரா, தனது அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக பேட்டி கொடுத்துள்ளார். எனினும் தனது கணவரை தான் விவாகரத்து செய்யபோவதாகவும் இதில் ஏற்பட்ட மன உளைச்சலில் மனநல மருத்துவரிடம் தான் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இதில் சம்பந்தப்பட்ட நடிகர்கள் மட்டுமல்லாது சுசித்ராவின் நிலைமையுமே படு மோசமாக உள்ளதாம். மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவருக்கு தொடர்ந்து பல மிரட்டல்கள் வருகிறதாம். இதைதொடர்ந்து அவர் தனது கணவர் கார்த்திகை விவாகரத்து செய்துவிட்டு லண்டனுக்கு செல்லபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அவருடைய தங்கை இருக்கிறாராம்.
