Thursday, February 13
Shadow

Tag: Director

திட்டமிடுதல் என்பது நான் அப்பாவிடம் கற்று கொண்ட ஒரு விஷயம் – இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன்

Latest News, Top Highlights
திட்டமிடுதல் என்பது நான் அப்பாவிடம் கற்று கொண்ட ஒரு விஷயம் என்று இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்பாவே நேசித்தேர்கள் இத்தவை பேரா என்பதை, இன்று வரை விடாமல் அடித்துக் கொண்டிருக்கும் என் தொலைபேசி பறை சாற்றுகிறது. என் இழப்பை தங்கள் வீட்டு இழப்பாக கருதி, அப்பா இந்த செய்தியை பல ஊடகங்களில் கொண்டு சென்ற அனைவரும் நன்றி. திட்டமிடுதல் என்பது நான் அப்பாவிடம் கற்று கொண்ட ஒரு விஷயம் அது ஒரு படப்பிடிப்பாகட்டும், இல்லை தன்னுடைய இறுதி யாத்திரை ஆகட்டும், எல்லாவம அழகாக யோசித்து நேர்த்தியாக திட்டமிடுவது அப்பாவின் பலம். படப்பிடிபை அப்பா, திட்டமிடும் நேரில் பார்த்து பிரமித்த எனக்கு அவர், தன் இறுதி யாத்திரை எப்படி இருக்க வேண்டும் என்று என்னிடம் கூறிய போது மகனாக நொறுங்கி போனேன். எங்கு தன்னை வைக்க வேண்டும், என்ன உடுத்த வேண்டும், வருபவர்களை எப்படி...
திரைப்பட இயக்குனர் கே. வி. ஆனந்த் பிறந்த தின பதிவு

திரைப்பட இயக்குனர் கே. வி. ஆனந்த் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
கே. வி. ஆனந்த் ஒரு தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர். 2005-ஆம் ஆண்டு வெளிவந்த கனா கண்டேன் மற்றும் 2009-ஆம் ஆண்டு வெளிவந்த அயன் திரைப்படங்கள் மூலம் மக்களிடையே சிறந்த இயக்குனராகப் பெயர் பெற்றார். அதற்கு முன்னரே, பல இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி உள்ளார். 1995-ஆம் ஆண்டு அவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய முதல் திரைப்படம் தென்மாவின் கொம்பத்து என்ற மலையாளத் திரைப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருது பெற்றுள்ளார். 1999ஆம் ஆண்டு ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த முதல்வன் திரைப்படத்தில் பணியாற்றினார். அப்போது தனது நுட்பமான ஒளிப்பதிவு திறமைக்காகவும், பிரம்மாண்டத்திற்காகவும் பாராட்டப்பட்டார். இவர் இயக்கிய படங்கள் : காப்பான், கவண், அனேகன், மாற்றான், கோ, அயன், சிவாஜி : தி பாஸ், மீரா...
அலாவுதீனின் அற்புத கேமரா பட கதை குறித்து இயக்குனர் விளக்கம்

அலாவுதீனின் அற்புத கேமரா பட கதை குறித்து இயக்குனர் விளக்கம்

Latest News, Top Highlights
அலாவுதீனின் அற்புத கேமரா படத்திற்கும், சௌந்தர்யா ரஜினிகாந்தின் கணவர் விசாகனுக்கு சொன்ன கதையும் வேறு வேறு என்று மூடர் கூடம் படத்தின் இயக்குனர் நவீன் தெரிவித்துள்ளார். மூடர் கூடம் படத்தின் புகழ் இயக்குனர் நவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அலாவுதீனின் அற்புத கேமரா. இப்படத்தில், நவீன் உடன் இணைந்து கயல் ஆனந்தி நடித்துள்ளார். அதுவும், பிக்பாக்கெட் அடிக்கும் திருடியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. முழுக்க முழுக்க வெளிநாடுகளில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படம் வெளியீட்டிற்கு தயார் நிலையில், உள்ள போது, ஃப்ளாஷ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் சொர்ணா சேதுராமன் இப்படத்தை வெளியிட தடை கோரியுள்ளார். இவர், விசாகனின் தாய்மாமா என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில், வார இதழ் ஒன்றிற்கு நவீன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: விசாகனுக்கு கதை சொல...
“வகிபா” படம் குறித்து இயக்குனர் இகோர் பேட்டி

“வகிபா” படம் குறித்து இயக்குனர் இகோர் பேட்டி

Latest News, Top Highlights
பிலிம் பூஜா என்ற பட நிறுவனம் சார்பில் ஸ்சொப்பன் பிரதான் கதை எழுதி தயாரித்திருக்கும் படம் “வகிபா" இது வண்ணக்கிளி பாரதி எனும் பெயரின் சுருக்கமாகும். இந்த படத்தில் புதுமுகம் விஜய்கரண் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக மனிஷாஜித் நடிக்கிறார். மற்றும் நான் மகான் அல்ல மகேந்திரன், கஞ்சா கருப்பு, A.வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவை S.சக்திவேல், இசையை முஜிப்ரஹ்மான், வசனத்தை ரா,கண்ணன், பாடல் பணிகளை மோகன்ராஜ், குகை மா.புகழேந்தி ஆகியோரும் செய்துள்ளனர். படத்தின் எடிட்டிங் பணிகளை G.சந்திரகுமார், கலை பணிகளை சாய்மணி, நடனம் பணிகளை ரமேஷ், சண்டையை நைப் நரேனும், கதை, தயாரிப்பு பணிகளை ஸ்சொப்பன் பிரதானும் செய்து வருகின்றனர். இந்த படத்தை இகோர் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் இவர் கலாபக்காதலன், தேன்கூடு, வந்தா மல போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. படம் பற்றி இயக்குனர் இகோர் ...
இயக்குனர் கே. சுப்பிரமணியம் பிறந்த தின பதிவு

இயக்குனர் கே. சுப்பிரமணியம் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
கிருஷ்ணசுவாமி சுப்பிரமணியம் 1930களிலும், 40களிலும் புகழ்பெற்று விளங்கிய தமிழ்த் திரைப்பட இயக்குனர். பொதுவாக கே. சுப்பிரமணியம் என அழைக்கப்பட்டவர். கும்பகோணத்தைச் சேர்ந்த வழக்குரைஞரான இவர் 1936 இலிருந்து 1945 வரை பல தமிழ்த் திரைப்படங்களை இயக்கியவர். எம். கே. தியாகராஜ பாகவதர், எஸ். டி. சுப்புலட்சுமி, என். எஸ். கிருஷ்ணன் பி. யு. சின்னப்பா ஆகிய நடிகர்களைக் கொண்டு இந்திய சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவான பல படங்களை இயக்கியவர். "தமிழ்த் திரையுலகின் தந்தை’ என்று வழங்கப்படுகிறார். கே. சுப்பிரமணியம் தமிழ்நாடு தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில், பிரபல வழக்குரைஞராக இருந்த கிருஷ்ணசுவாமி ஐயருக்குப் பிறந்தார். தந்தையைப் போலவே சட்டம் படித்த இவர், கும்பகோணத்தில் வழக்குரைஞராகச் சிலகாலம் பணியாற்றினார். பின்னர், திரைப்படத் துறையின் மீதுள்ள ஈடுபாட்டால் சென்னைக்கு வந்தார். தமிழ்த் திரைப்பட முன்னோடிகளுள் ஒருவரும், ...
விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி63 படத்திற்கு எதிராக வழக்கு ஒத்திவைப்பு

விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி63 படத்திற்கு எதிராக வழக்கு ஒத்திவைப்பு

Latest News, Top Highlights
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்திற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கால் பந்தாட்டம் தொடர்பான கதை என்னுடையது என்றும், 256 பக்கங்கள் கொண்ட கதையை பதிவு செய்துள்ளதாக குறும்பட இயக்குநர் செல்வா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சர்கார், விஜயின் இந்தப் படம் ரிலீசுக்குப் பின்பு ஏற்படுத்திய சலசலப்புக்கு இணையாக ரிலீசுக்கு முன்பும் ஏற்படுத்தியது, 'கதைத்திருட்டு' என்ற குற்றச்சாட்டில் சிக்கி. சர்கார் தனது கதை என்றும் 'செங்கோல்' என்ற பெயரில் தான் ஒரு திரைக்கதையை உருவாக்கியதாகவும் அதுதான் இப்போது சர்கார் படமாகியிருப்பதாகவும் வருண் ராஜேந்தரின் என்பவர் குற்றம் சாட்டி, அது நீதிமன்றம் வரை சென்று இறுதியில், சர்கார் படத்தின் டைட்டிலில் அவருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார் முருகதாஸ். பணமும் கொடுக்க...

இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஜோஷ்வா ஸ்ரீதர் என்பவர் ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் 2004 டிசம்பர் 8 அன்று வெளியான புகழ்பெற்ற படமான காதல் திரைப்படத்தின் வழியாக இசையமைப்பாளராக அறிமுகமானார். ஜோஷ்வா ஸ்ரீதர் சென்னையில் 1974 மார்ச் 9 அன்று பிறந்தார். இவரது பெற்றோர் சரவணன் மற்றும் இராஜலட்சுமி ஆகியோர் ஆவர். இவர் சென்னையில் உள்ள பாரதிய வித்யாபவனின் இராஜாஜி வித்யாஸ்ரமம் பள்ளியில் 1980 முதல் 1990 வரை பயின்றார். மேனிலைக்கல்வி முடித்தது பின் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மியூசிக்கில் பியானோ வாசிக்கவும் மேற்கத்திய இசையின் நுணுக்கங்களையும் கற்றார். பியானோ படிக்கும்போது அங்கு கித்தார் கற்ற பெண்ணோடு காதல் மலர 19 வயதில் திருமணம்; 20 வயதில் முதல் குழந்தை என வாழ்க்கையின் போக்கு மாறியது. திருமணத்துக்குப்பின் 1993 இல் கிருத்துவ மதத்துக்கு மதம் மாறினார். அதுவரை ஸ்ரீதராக இருந்தவர் ஜோஷ்வா ஸ்ரீதராக மாறினார். 2004 ஆண்...
மறைந்த இயக்குநர் மகேந்திரன் பெயரில் விருது – இயக்குநர் சங்கம் முடிவு

மறைந்த இயக்குநர் மகேந்திரன் பெயரில் விருது – இயக்குநர் சங்கம் முடிவு

Latest News, Top Highlights
மறைந்த இயக்குநர் மகேந்திரன் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இயக்குநர் சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர்கள் மனோ பாலா, பேரரசு, யார் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது இந்த நிகழ்ச்சியில் பேசிய மனோ பாலா, மகேந்திரன் பெயரில் விருது வழங்க வேண்டும் என்று கூறினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் சங்கப் பொருளாளர் இயக்குநர் பேரரசு, மகேந்திரன் பெயரில் இயக்குநர் சங்கம் சார்பில் விருது வழங்கப்படும் என்று கூறினார். மேலும் தமிழக அரசு சார்பில் மகேந்திரன் பெயரில் விருது ஒன்றை உருவாக்க கோரிக்கை வைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்....

இயக்குனர் ராம் கோபால் வர்மா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ராம் கோபால் வர்மா சுருக்கமாக ஆர்.ஜி.வி என அறியப்படுபவர் இவர் ஒரு இந்தியத் திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவரது பணிகள் பாலிவுட் மற்றும் டோலிவுட், முறையே இந்தி மற்றும் தெலுங்குத் திரைப்படத் துறைகளில் பெரும்பான்மையாக பங்களித்துள்ளார், மேலும் இவர் உளவியல் பரபரப்பூட்டும் படைப்பு, திகில்த் திரைப்படம், கற்பனை திரைப்படங்கள், அரசியல்வாதி, இசையகம், குற்றவியல் தொடர்புடைய மேலும் பல வகைத் திரைப்படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார். ராம் கோபால் வர்மா தெலுங்கு திரைப்படத் துறையில் தனது முதல் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். முதலில் அவர் ஏதாவது வாய்ப்புக் கிடைக்காதா என்று ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்னா ஒளிப்பட நிலையத்தைச் (ஸ்டூடியோ) சுற்றி வந்து கொண்டிருந்தார். இந்த ஓளிப்பட நிலையமானது பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜூனாவின் தந்தைக்குச் சொந்தமானதாகும். அப்போது அங்கு நாகார்ஜூன...

இயக்குனர் எஸ். பி. முத்துராமன் பிறந்த தின பதிவு

Birthday, Latest News
தமிழ்த் திரையுலகின் பல்கலைக்கழகம் ஏவிஎம் நிறுவனம் என்றால், அதில் உருவாகிய கலைஞர்கள் ஒரு சினிமா பேராசிரியர்கள். சிவாஜிகணேசன், கமல்ஹாசன் தொடங்கி எண்ணற்ற ஆளுமைகளை ஏவிஎம் நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. அப்படி ஏவிஎம்-மால் உருவாக்கப்பட்ட தமிழ் சினிமாவின் முக்கியமான முகம் இயக்குநர் SP.முத்துராமன். கவிஞர் கண்ணதாசனால் ஏவி.மெய்யப்ப செட்டியாரிடம் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு உதவி எடிட்டராக தனது பயணத்தைத் தொடங்கிய SP.முத்துராமன், அடுத்த ஐம்பது ஆண்டுகளில் அதே ஏவிஎம் ஸ்தாபனத்தில் இணை தயாரிப்பாளராக அமர்த்தப்படுகிறார் என்றால் அது அவரது கடும் உழைப்புக்குச் சான்று. தமிழ்த் திரையுலகில் இருபத்தைந்து ஆண்டுகளில் எழுபது படங்கள் இயக்கியது சாதனையென்றால், அது அத்தனையும் வியாபாரரீதியாக வெற்றிப்படங்களாக அமைந்தது பெரும் சாதனை. புராணகால திரைப்படச் சூழலிலிருந்து தமிழ் சினிமாவை மீட்டெடுத்து, கதைக்கான முக்கியத்துவத்துடன் ...