25 ஆண்டுகால GVM இசைப் பயணம்… கோலாலம்பூரில் மீண்டும் அரங்கேறும் ‘ஒன்றா ரெண்டா’!
25 ஆண்டுகால GVM இசைப் பயணம்… கோலாலம்பூரில் மீண்டும் அரங்கேறும் ‘ஒன்றா ரெண்டா’!
அக்டோபர் 10-ல் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி – கார்த்திக், ஸ்ருதி ஹாசன், கிரிஷ், சைந்தவி உள்ளிட்ட முன்னணி பாடகர்கள் பங்கேற்பு
கோலாலம்பூர்:
இசை, காதல், உணர்வு, நினைவுகள் என தனக்கே உரிய கதை சொல்லும் பாணியின் மூலம் தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், திரையுலகில் தனது 25 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்துள்ள நிலையில், அந்த இசை மற்றும் நினைவுப் பயணம் தற்போது மலேசியாவிலும் அரங்கேற உள்ளது.
சென்னையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, ‘ஒன்றா ரெண்டா – 25 Years of GVM’ எனும் மாபெரும் இசை விழா வரும் அக்டோபர் 10, 2026 அன்று கோலாலம்பூரில் நடைபெறுகிறது.
கௌதம் வாசுதேவ் மேனனின் திரைப்படங்களோடு பயணித்த இனிமையான பாடல்கள், ரசிகர்களின் மனதில் பதிந்த காட்சி...
