
மலையாளத்தில் வசூலை குவித்த ‘பிரேமம்’ படத்தில் நாயகியாக அறிமுகமான சாய் பல்லவி தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்து வருகிறார். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கரு படத்தில் நடித்து முடித்துள்ள இவர் அடுத்ததாக தனுஷ் ஜோடியாக மாரி-2 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில், செல்வராகவன் இயக்கும் சூர்யாவின் 36-வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
சூர்யா படத்தில் நடிப்பது குறித்து சாய்பல்லவி பேசும் போது,
“சிறு வயதில் இருந்தே நடனத்தில் எனக்கு விருப்பம் அதிகம். படித்துக் கொண்டே நடனம் கற்றுக்கொண்டேன். பின்னர் சினிமாவில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் எனது தந்தைக்கு நான் சினிமாவில் நடிப்பது பிடிக்கவில்லை. எனது சினிமா வாழ்க்கைக்கு அவரே வில்லனாக இருந்தார். என்னை மருத்துவம் படிக்க ஜார்ஜியாவுக்கும் அனுப்பி விட்டார்.
இந்நிலையில் தான், பிரேமம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. விடுமுறை நாட்களில் மட்டுமே நடிப்பேன் என்ற நிபந்தனையுடன் அந்த படத்தில் நடித்தேன்.
எனக்கு முகப்பருக்கள் இருந்தன. ஆனாலும் மேக்கப் போடாமலேயே டைரக்டர் என்னை நடிக்க வைத்தார். படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது.
அதன்பிறகு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. சூர்யா எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவருடன் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் கல்லூரியில் படித்தபோது நிறைய பேர் என்னை காதலிப்பதாக கூறினார்கள். எனக்கு காதலில் விருப்பம் இல்லை. தற்போதைக்கு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்.” என்றார்.