“விழுந்த இடத்திலிருந்து மீண்டு வந்திருக்கிறார் நாகராஜ்!” – ‘ஆகாயம்’ விழாவில் திரையுலகினர் பாராட்டு
“விழுந்த இடத்திலிருந்து மீண்டு வந்திருக்கிறார் நாகராஜ்!” – ‘ஆகாயம்’ விழாவில் திரையுலகினர் பாராட்டு
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் தனது கதை சொல்லும் திறமையாலும், இயல்பான நடிப்பாலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் தினந்தோறும் நாகராஜ். வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு தடுமாற்றங்களுக்குப் பிறகு, நீண்ட இடைவெளியைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநராக களமிறங்கியிருக்கிறார்.
அவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் புதிய திரைப்படம் ‘ஆகாயம்’. டெல்டா டாக்கீஸ் சார்பில் ஜெயச்சந்திரன் மற்றும் கார்த்திகா தேவி தயாரித்துள்ள இப்படத்தில் ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாகவும், ஆலிஷா மிராணி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் திரையுலக பிரபலங்கள், படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் உற்சாகமாக நடைபெற்றது.
விழாவில் பேசிய பெரும்பாலான திரையுலகினர், ‘ஆகாய...
