மறைக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும் ‘அமரம்’ – தைரியமான கதையுடன் வரும் புதிய திரைப்படம்
மறைக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும் ‘அமரம்’ – தைரியமான கதையுடன் வரும் புதிய திரைப்படம்
“இப்படியொரு கதையை உருவாக்க நிறைய தைரியம் வேண்டும்” – இயக்குநர் அருள் கிருஷ்ணன்
மூன்று காலகட்டங்கள், மூன்று வெவ்வேறு நிலப்பரப்புகள், அவற்றுக்குள் பயணிக்கும் அழியாத காதல்… அதனுடன் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் வாழ்வையும் வலியையும் பேசும் படமாக உருவாகியுள்ளது ‘அமரம்’.
திவ்ய சேத்ரா பிலிம்ஸ் சார்பில் நிர்மலா ராஜன் வழங்க, C.R. ராஜன் தயாரித்துள்ள இப்படத்தை அருள் கிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார். தேஜஸ் ராஜன் கதாநாயகனாகவும், ஐரா அகர்வால் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ஜார்ஜ், சாய் தீனா, நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்...



